தமிழரை தவறான முறையில் திருப்திப்படுத்தும் புழுகர் நிராஜ் டேவிட்!!


இந்தியப்படை அதிகாரியை ஆச்சரியப்படவைத்த புலிகளின் தொடர்பாடல்முறைகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 22) –நிராஜ் டேவிட்

zaterdag 26 mei 2012

அன்றும் இன்றும் தமிழர்களைக்கொன்று அதற்கு புலிகள் கூறும் போலி நியாயங்கள்!


இதுவும் புலிகளின் முடிவுக்கு ஒரு காரணம்,இன்னும் தொடர்ந்தால் தமிழினத்தின் நிலை??

கே.பி. ஒரு அரசியல் கைதியா? ஊடகவியலாளரின் கேள்வியால் தடுமாறிய அமைச்சரவை பேச்சாளர் யாப்பா!



[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 02:47.34 AM GMT ]
இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவிடம், அப்படியானால் கே.பி. ஒரு அரசியல் கைதியா இல்லையா என எழுப்பிய கேள்வியால் அவர் தடுமாறினார்.
அந்தக் கேள்விக்கு அவரால் சரியான முறையில் பதிலளிக்க முடியவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுடனும் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சில குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டவர்களும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டியுள்ளவர்களும் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த அவர், இங்கு அரசியல் கைதிகள் என எவரும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
இந்த வேளையில் குறிப்பிட்ட பத்திரிகையாளர் ஒருவர், அப்படியானால் கே.பி. ஒரு அரசியல் கைதியா? இல்லையா? எனக் கேள்வி எழுப்பிய போது அமைச்சர் தடுமாறினார். பின்னர், பெயர் அடிப்படையிலான தகவல்கள் தம்மிடம் இல்லாததால் அது தொடர்பாக கருத்து வெளியிட முடியாது எனக் குறிப்பிட்டார்.
தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பாக சாட்சியங்களை சமர்ப்பித்து தேவையான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டுவருவதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான குற்றப்பத்திரிகைகளை நீதிமன்றம் விசாரித்து அவர்களை நிரபராதிகள் என தெரிவித்து விடுதலை செய்தால் விடுவிப்பதில் சிக்கல் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் 359 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் 309 சந்தேகநபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த இரண்டுப் பிரிவுகளில் கே.பி.என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எந்தப் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளார் என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, பெயர் அடிப்படையிலான தகவல்கள் தம்மிடம் இல்லாததால் அது தொடர்பாக கருத்து வெளியிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ருத்ரகுமாரனுக்கு அமெரிக்கா அடைக்கலம் வழங்கியுள்ளது
[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 03:08.10 AM GMT ]
போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட ருத்ரகுமாரனுக்கு அமெரிக்க அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் தலைவர் பிரபாகரனினால் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குற்றச் செயல்களுடன் ருத்ரகுமாரனுக்கு தொடர்பு காணப்படுகின்றது.
ருத்ரகுமாரன் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் ருத்ரகுமாரன் ஐந்து தடைவகள் இலங்கைக்கு விஜயம் செய்து, பிரபாகரனுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரபாகரனின் சட்ட ஆலோசகராகவும் ருத்ரகுமாரன் கடமையாற்றியுள்ளார் என திவயின குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்! – ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்! – ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர்


இந்திய அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் அதிகாரிகளும் தமிழரை கொன்றவராம்,தமிழரின் எதிரிகளாம்!!!


புலிகளுக்கு எதிராக கோத்தபாய இந்தியாவை இழுத்தது எப்படி? "கோத்தாவின் யுத்தம்" விபரிக்கிறது
[ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 12:20.36 AM GMT ] [ தினமனி ]

zondag 13 mei 2012

புலிகள் தொடர்பான வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் பல்டி அடித்தது !



Announcing the sentence U.S. District Judge Raymond Dearie of the US District Court for Eastern District of New York in Brooklyn casted doubt on the government's case calling the 20-year sentence the prosecutors were seeking is excessive.



vrijdag 11 mei 2012

யாழ் பல்கலைக்கழக போராட்ட கோசத்தைக் கூறக் கோரி தாக்கினர்-(வதைமுகாமில் நான் : பாகம் - 48)

குறிப்பு : அமைப்புக் குழுவில் யார் யார்? அவர்கள் எந்த இயக்கங்கள்? என்று கேட்டனர்.

donderdag 3 mei 2012

யாழ்-கொக்குவில் அகதிமுகாம் மீதான படுகொலைத் தாக்குதல்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 19) நிராஜ் டேவிட்


எப்படியெல்லாம் பொய் சொல்கிறார் இவர்,எங்கள் குடும்பமும் அப்போது அங்குதான் இருந்தனர்.நான் மஞ்சவண்ணப்பதி முருகன் கோயிலில் இருந்து தாக்குதலை நேரில் பார்த்தேன்,அடுத்தநாள் இணுவிலூடாக கல்லூரிக்கு முதன்முதல் ஊடுருவி சென்றது நானும் எனது நண்பர்களும்,அப்போது ராணுவம் உள் நுழையவில்லை,புலிகள் அச்சத்தில் அவர்கள் இருந்தனர்,தாக்குதலால் பொதுமக்கள் இறந்து அப்போது மைதானத்தில் புதைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.நான் என் சகோதரருடன் அங்கிருந்து தப்பி சண்டிலிப்பாய் சென்றேன்,இரு நாட்களின் பின் அம்மாவும் அப்பாவும் அதே வழியில் தப்பினர்.சுற்றிவளைக்கப்பட்டது என்பதே பொய்!முன்பக்கம் இராணுவம் இருந்தது,பின்பக்கம் யாருமே இல்லை,விசாகபதி ஆசிரியரும் பெரியவர்களும் ராணுவத்துடன் பேசினர்,அவர்களை ராணுவம் கொடுமை செய்தது,புலிகள் சுட்டதாக சொன்னது.உணவின்றி பரிதவித்த மக்கள் புலிகள் கல்லூரிக்கு குண்டு வைக்கப்போவதாக உண்டான புரளியால் பின்பக்கமூடாக சிலநாட்களில் தப்பியோடினர்.இந்திய ராணுவம் கொலைகாரர் என்பது உண்மை,அதைவிட நம்மவர் கொடூரர்,இதுதான் உண்மை!!