ஆந்திர மாநிலத்தில் உள்ள துணி காவல்நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 147 ஈழத்தமிழர்களும் நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர காவல்துறையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இவர்கள் தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சிர்கார் விரைவு தொடருந்து மூலம் நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களின கடவுச்சீட்டுகள், அகதிமுகாம்களில் வழங்கப்பட்ட அடையாளச் சான்றுகள், சரிபார்க்கப்பட்ட பின்னர், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கிழக்கு கோதாவரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரிவிக்ரம் வர்மா தெரிவித்துள்ளார்.
சந்தேகத்துக்கிடமான முறையில் லோவாவில் உள்ள தலுபுல்லம்மன் ஆலயப் பகுதியில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தம்மை ஐந்து முகவர்கள் கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி அழைத்து வந்ததாக கூறியுள்ளனர்.
ஒவ்வொருவரிடம் இருந்தும் முகவர்கள் 5000 ருபா பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், லோவா ஆலயத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
13 நாட்களுக்கு முன்னர் இவர்கள் லோவாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் உள்ளூர் முகவர்கள் காவல்துறையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட அகதிகள் மீது தாம் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை என்றும் அவர்களை சென்னை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும், ஆந்திர காவல்துறை கண்காணிப்பாளர் திரிவிக்ரம் வர்மா தெரிவித்துள்ளார்.
சென்னை காவல்துறையினர் அகதிகளை ஏமாற்றியதாக முகவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வார்கள் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். |
Geen opmerkingen:
Een reactie posten