உலகில் நீதிக்காக என்று நீதிமன்றங்கள் எல்லாம் நிறுவி தமது சட்டங்களை மட்டுமே சரியாக்கி,அடிமைகளையும் தலையாட்டவைத்துக்கொண்டிருக்கும் அடுத்த நிலங்களை அக்கிரமமாக பறித்து ஆட்சியமைத்த அதே திமிரில் இன்றும் அநியாயங்களை அள்ளிக்கொட்டும் ஐரோப்பிய நாடுகளின் காட்டுத்தர்ப்பாரில் ஜனநாயகமாவது,ஊடக சுதந்திரமாவது.ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒன்றை அமைத்துவிட்டு அது சொல்வதை மீறி உலகில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தாக்கினால் குற்றமில்லை,தண்டனையில்லை.சொந்த நாட்டில் இடம்பெறும் கிளர்ச்சியை அடக்கிய கடாபி,சதாமெல்லாம் பாரிய குற்றவாளிகள்!!நல்ல நீதி,சிறந்த நீதிமன்றங்கள்!!பக்கசார்பைத் தவிர வேறு ஒன்றுமில்லை உலகில்!!கடவுள்தான் நீதியை காப்பாற்ற வேண்டும்!!
லிபிய அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது நேட்டோ தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 யூலை 2011, 02:04.30 பி.ப GMT ] லிபியாவின் அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது நேட்டோ படை நேற்று தாக்குதல் நடத்தியதாக லிபிய அதிகாரிகள் கூறினர்.இந்தத் தாக்குதல் விடிவதற்கு முன்பாக நடந்தது. இதில் ஒளிபரப்பு துறை ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் காயம் அடைந்தனர் என லிபியா அரசின் ஆங்கில செய்தி சேனல் இயக்குனர் காலித் பசேல்யா கூறினார்.
இந்தத் தாக்குதல் சர்வதேச தீவிரவாதம் என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறுவதாகவும் இது உள்ளது என அவர் தெரிவித்தார்.
லிபிய தொலைக்காட்சியின் தலைமையகத்தில் நடந்த தாக்குதலுக்கு நேட்டோ பொறுப்பேற்றது. நேட்டோ தாக்குதலில் லிபிய அரசின் 3 தொலைக்காட்சி ஒளிபரப்பு செயற்கைகோள்கள் செயல் இழந்தன என்று நேட்டோ தெரிவித்தது.
லிபிய பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க சர்வதேச பத்திரிக்கையாளர்கள் முன்வர வேண்டும் என பசேல்யா வேண்டுகோள் விடுத்தார். நாங்கள் லிபிய அரசு தொலைக்காட்சி ஊழியர்கள் ராணுவ இலக்கு நபர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
நேட்டோ படைகள் தாக்குதலை துவங்கி 5 மாதம் ஆகிறது. இந்த கால கட்டங்களில் கடாபிக்கு ஆதரவாக அரசு தொலைக்காட்சிகள் செய்திகள் ஒளிபரப்பி ஆதரவு தெரிவித்து வந்தன.
லிபிய தொலைக்காட்சிகள் தற்போதைய கடாபி ஆட்சியை ஆதரிக்கின்றன. நேட்டோ தாக்குதலை எதிர்க்கின்றன. நேட்டோ தாக்குதல் நடத்திய போதும் லிபிய அரசு தொலைக்காட்சிகள் தடை இல்லாமல் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten