தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 augustus 2011

பொஸ்பரஸ் எரி குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்த சிங்கள படைகள்

[ திங்கட்கிழமை, 01 ஓகஸ்ட் 2011, 03:38.13 AM GMT ]
இறுதி யுத்தம் நடைபெற்ற இறுதிக்கால பகுதியில் சிங்கள இராணுவத்தால் தமிழ்மக்கள் வாழ்விடங்கள் மீது உலகில் தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் எரி குண்டுகளை வீசி மக்கள் கோரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மக்களை மீட்கும் போர் என சிங்கள பௌத்த பேரினவாதம் கூறியபடி தமிழர்களின் நிலத்தை அங்கு வாழ்ந்த பாரம்பரிய தமிழர்களை கூண்டோடு அழித்து அவர்களை மனித நாகரிகத்திற்கு முரணாக கொன்று குவித்துள்ளது சிங்கள ஆளும் மகிந்த அரசு.
பதுங்கு குழிகளில் பாதுகாப்பு தேடி இருந்தவர்கள், உறங்கியவர்கள் மீது எரி குண்டுகளை வீசி மூச்சுத் திணறடித்து அதன் வாயிலாக உடல் எல்லாம் எரிந்து துடி துடிக்க எங்கள் உறவுகள் இறந்துள்ளனர்.
இவ்வாறு பல போராளிகள் தலைவர்கள் நச்சுக் குண்டு வீசி, மூச்சுத் திணறலில் மயக்கமுற்று சுய நினைவற்று இருந்த நிலையில் பல தளபதிகள், தலைவர்கள் கைது செய்யப்பட்டு, கோரமாக தலைகள் வெட்டப்பட்டு, நகங்கள் பிடுங்கப்பட்டு, இரும்புக் கம்பிகளினால் தாக்கப்பட்டு, பெட்ரோல் அசிட் வீசி கோர மகாவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்த காட்சி படங்களை பார்க்கும் ஒவ்வொரு மானமுள்ள தமிழனின் இரத்தம் கொதிக்கும்
துயர் தோய்ந்த தமிழரின் வாழ்கையில் ஆறாத சோகமாக இருக்கும் முள்ளிவாய்க்கால் படுகொலை,
உங்கள் கசப்புகளை மறந்து அனைத்து அமைப்புகளும் அனைத்து ஊடகங்களும் ஒன்றாக குரல் எழுப்பி மகிந்த ராஜபக்சவையும், போர்க்குற்றம் புரிந்த அனைவரையும் கூண்டில் ஏற்றுவோம்.

Geen opmerkingen:

Een reactie posten