zaterdag 4 februari 2012

கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபாகரன்! - பிரபாவிடம் துப்பாக்கிப் பிரயோக பயிற்சி பெற்ற பழ. நெடுமாறன்!!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் முதலும் கடைசியுமாக கண்ணீர் வடித்து அழுது இருக்கின்ற சந்தர்ப்பத்தை புத்தகத்தில் எழுதி இருக்கின்றார் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர்களில் ஒருவரான எம். ஆர். நாராயன் சுவாமி.
இவர் எழுதி இருக்கின்ற புத்தகத்துக்கு பெயர் Inside an Elusive Mind - Prabhakaran: the first profile of the world's most ruthless leader என்பது.

2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.

சீலன் அல்லது சார்ஸ் அன்ரனி என்கிற போராளி மரணம் அடைந்தபோது பிரபாகரன் கண்ணீர் வடித்து அழுது இருக்கின்றார் என்று இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார் நாராயன்.

இவர் ஆங்கிலத்தில் எழுதி இருக்கின்ற வரிகளை தமிழில் தருகின்றோம்.

-சீலன் ஓடிக் கொண்டு இருக்கின்றார். பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது முன்பு நடத்தி இருந்த தாக்குதலில் துப்பாக்கி ரவை ஒன்று முழங்கால் மூட்டில் ஏற்படுத்தி இருந்த காயம் பெரிய வேதனையை கொடுக்கின்றமையை சீலன் உணர்கின்றார். தொடர்ந்து ஓட முடியாமல் இருக்கின்றது.
சுட்டுக் கொன்று விடுங்கள் என்று சக போராளி நண்பனிடம் கேட்கின்றார். சீலனின் இக்கோரிக்கை நண்பனுக்கு அதிர்ச்சித் திகைப்பைக் கொடுக்கின்றது. இன்னும் சில நிமிடங்கள் வரை ஓடினால் சில நிமிடங்களில் கிராமம் ஒன்றை அடைந்து மறைவிடத்தில் ஒளித்து விடலாம் என்று இரக்கின்றான் நண்பன்.
ஆனால் நண்பன் சொன்னதை சீலன் பொருட்படுத்துகின்றார் இல்லை. தயவு செய்து சுட்டு விடுங்கள் என்று கண்டிப்பாக சொல்லி விடுகின்றார். நண்பனுக்கு வேறு வழியோ, நேரமோ இல்லை. நண்பனின் கரங்கள் நடுங்குகின்றன. சீலனின் நெற்றையை குறி பார்த்து சுட்டு விடுகின்றார்.

பிரபாகரன் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த போராளி மாத்திரன் அல்லன் சீலன். பிரபாகரனின் மிக நெருங்கிய நண்பனும்கூட.

சீலனின் மரணத்துக்கு பழி வாங்கத் தீர்மானித்து விடுகின்றார் பிரபாகரன். செல்லக்கிளி என்கிற போராளியிடம் இப்பொறுப்பை ஒப்படைக்கின்றார்.
இப்பழிவாங்கல் தாக்குதலில் இராணுவத்தின் 13 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். செல்லக்கிளியும் சாவு அடைந்தார்.

சீலன் என்கிற முன்னணிப் போராளியின் இழப்பை சுயம் தேற்றிக் கொள்ள பிரபாகரனால் முடியவில்லை. பிரபாகரன் உடைந்து போனார். சீலனின் மரணத்தை தாங்க முடியாமல் புலம்பினார்.

பிரபாகரன் கண்ணீர் விட்டு அழுதமையை ஏனையவர்கள் பார்த்த முதலாவதும், கடைசியுமான சந்தர்ப்பம் அதுவேதான்.
பிரபாவிடம் துப்பாக்கிப் பிரயோக பயிற்சி பெற்ற பழ. நெடுமாறன்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் துப்பாக்கிப் பிரயோக பயிற்சி பெற்ற தமிழக அரசியல்வாதி ஒருவர் இருக்கத்தான் செய்கின்றார்.

இவர் வேறு யாரும் அல்லர்.

பிரபாகரனைப் பற்றிய புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட இருக்கின்ற பழ. நெடுமாறன்.
பிரபாகரனை சுபாஸ் சந்திரபோஸுடன் ஒப்பீடு செய்து இருக்கும் பழ. நெடுமாறன்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனை இந்தியாவின் விடுதலைப் போராளிகளில் ஒருவரான சுபாஸ் சந்திர போஸ் நேதாஜியுடன் ஒப்பீடு செய்து இருக்கின்றார் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவரும் தமிழ்நாடு அரசியல்வாதியுமான பழ. நெடுமாறன்.

பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் என்று இவர் நூல் ஒன்று எழுதி இருக்கின்றார். இந்நூல் 1000 பக்கங்கள் வரை கொண்டது. நூல் வெளியீட்டு விழா வரும் மாதங்களில் இடம்பெற உள்ளது.

இந்நூலிலேயே பிரபாகரனையும், சந்திர போஸையும் ஒரு கட்டத்தில் ஒப்பீடு செய்து இருக்கின்றார் நெடுமாறன்.
-இந்தியாவின் மாபெரும் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் இந்தியாவை விட்டு வெளியேறினார். அந்த நிலையிலேயே அவர் உலகமறிந்த தலைவர்.
ஜெர்மனியும், ஜப்பானும் அவருக்கு உதவி செய்ய போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தன. இந்திய மக்களின் மாபெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருக்கு உலகத்திலேயே இரண்டு பெரிய வல்லரசுகள் என்னென்ன உதவிகள் தேவையோ அந்த உதவிகளைச் செய்து கொடுத்தன. பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜப்பானியர்களால் சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த இந்திய போர் வீரர்களை மீட்டு அவர்களைக் கொண்டு இந்தியத் தேசிய இராணுவத்தினை நேதாஜி சிங்கப்பூரில் உருவாக்கினார்.
இந்த இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள். மற்ற உதவிகள் ஆகியவற்றை ஜப்பான் கொடுத்தது. நேதாஜியின் சுதந்திர அரசை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நட்பு நாடுகள் அங்கீகரித்தன.நேதாஜியை தனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கிற அருமைத் தம்பி பிரபாகரனை நேதாஜியுடன் ஒப்பிட முடியாது. வயதிலும் சிறியவர், அனுபவத்திலும் சிறியவர். நேதாஜியைப் போன்ற பெரிய தலைவராக உருவாகி அதற்குப் பின்னர் அவர் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை.
இளைஞராயிருந்தபோது தன்னுடைய பதினாறாவது வயதில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.நேதாஜிக்கு உலக வல்லரசுகள் துணைபுரிந்தன. அருமைத் தம்பி பிரபாகரனுக்கு திக்கற்ற தமிழ் இளைஞர்கள் மட்டுமே துணை நின்றனர். வேறு எந்த நாடும், எந்த வல்லரசும் அவருக்கு உதவி புரிய முன்வரவில்லை.
ஆனால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் அள்ளி அள்ளித் தரும் நவீன ஆயுதங்களை வைத்திருக்கக் கூடிய சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டியடிக்கிற விடுதலைப் படையை பிரபாகரன் உருவாக்கிய விதம் கற்பனைக்கு எட்டாதது. அதைப் போலவே வலிமை வாய்ந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து அவர் நடத்திய வீரப் போராட்டமும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. இதை எப்படி அவர் சாதித்தார்?
இன்னமும் புரியாத புதிர்தான்.

Geen opmerkingen:

Een reactie posten