தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 maart 2012

போர்க்குற்ற விசாரணை-கத்தோலிக்க மத குருமார்களுக்கிடையே இருவேறுபட்ட கருத்துக்கள் !!


போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு கத்தோலிக்க குருமார்கள் கடிதம்
[ திங்கட்கிழமை, 05 மார்ச் 2012, 12:57.55 AM GMT ]
மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் உள்ளிட்ட 31 கத்தோலிக குருமார்கள் கையெழுத்திட்ட ஒரு கடிதம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைத் தலைவருக்கும், அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழு அளித்த பரிந்துரைகள் கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும், அது தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் வரும் காலத்தில் ஐ.நா மனித உரிமை பேரவைக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
போரில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு தரப்பட வேண்டும், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் உண்மைகள் ஏற்கப்பட்டு பொறுப்பேற்றல் உறுதி செய்யப்பட வேண்டும், அப்படி செய்தால்தான் நல்லிணக்கம் ஏற்படும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் சூழல் காரணமாகவே, இந்தக் கடிதத்தில் பிற தமிழ் பேசும் ஆயர்களின் கையெழுத்தைப் பெற முடியாமல் போய்விட்டது என்று மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இந்தக் கடிதத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் ஒட்டுமொத்த திருச்சபையின் கருத்து கிடையாது என்றும் இது கையெழுத்திட்டவர்களின் கருத்து என்றும் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.
இனப்பிரச்சனை தொடர்பாக ஆயர் மன்றத்தில் இதுவரை விவாதிக்கப்பட்டு நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை என்றும் எனவே, இது தொடர்பாக கார்தினால் மல்கம் ரஞ்சித் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்தாகவே கருதப்பட வேண்டும் என்றும் மன்னார் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நிலவரம் குறித்த விபரங்களை அளிக்கும் இக்கடிதத்தில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னால் சாட்சியம் அளித்த கிறிஸ்தவ குருமார் ஒருவர் மிரட்டப்பட்டதாகவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் கத்தோலிக்க குருமார்கள் பிளவு
[ திங்கட்கிழமை, 05 மார்ச் 2012, 12:44.55 AM GMT ]
ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை கத்தோலிக்கத் திருச்சபை எதிர்ப்பதாக, இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைக் குருவான கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனால், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் தலைமையிலான வடபகுதியைச் சேர்ந்த 31 கத்தோலிக்க குருமார், போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு 31 கத்தோலிக்க குருமார்களும் இணைந்து ஒப்பமிட்ட மனுவொன்றையும் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறுதல் தொடர்பில்,  கத்தோலிக்க மத குருமார்களுக்கிடையே இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten