சற்றுமுன் வைகோ கைதானார் ! திருப்பதியில் பலத்த பாதுகாப்பு !
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களுடன், இந்தியப் பாராளுமன்றம் நோக்கிப் புறப்பட்ட வைகோ அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் கைதாகியுள்ளார் என இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்ஷ வருகைக்கு எதிர்வுத் தெரிவித்து, பாராளுமன்றம் முன்பாக வைகோ அவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். இதன்போதே இவரைப் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.
இதேவேளை திருப்பதியில்(வெங்கடாச்சலபதி) பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ இன்று திருப்பதி கோவிலுக்குச் செல்லவுள்ளார் என்றும் அறியப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten