தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 maart 2013

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக புழல் சிறையில் 23 கைதிகள் உண்ணாவிரதம் !


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்தநிலையில் புழல் சிறையில் உள்ள  கைதிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புழல்  சிறைக் கைதிகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர்.
இன்று காலை 7.30 மணி அளவில் தண்டனை கைதிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அப்போது 23 கைதிகள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ராஜபக்ச மீது போர்க்குற்ற விசாரணை செய்ய வேண்டும்.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்
என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றனர்.

http://news.lankasri.com/show-RUmryDSXNYhvz.html

Geen opmerkingen:

Een reactie posten