அவரை வழிமறித்த லொரி ஓட்டுநர் ஒருவர் அவரிடம் தகாத முறையில் நடந்துக் கொள்ள முயற்சித்த போது அவரின் பிடியிலிருந்து தப்பி வந்த அந்த பெண், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் முறையிட்டார். லஞ்சம் பெற்றுக்கொண்டு ஓட்டுநருக்கு ஆதரவாக பேசிய பொலிஸார், பட்டப்பகலில் சாலையின் நடுவே அந்த பெண்ணை அடித்து விரட்டினர். இச்சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்தார். இந்த காட்சி நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாகியது. இச்சம்பவம் பொதுமக்களிடமும் மகளிர் அமைப்பினரிடையேயும் கடும் கொதிப்பை ஏற்படுத்தியது. இச்செயலில் ஈடுபட்ட பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாப் முதல் மந்திரி அறிவித்தார். ஆனால், இன்று வரை முழுமையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில், தன்னை அடித்த பொலிஸாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 12ம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என அந்த இளம்பெண் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பொலிஸார் மீது கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெற வேண்டும் என கூறி என்னையும் என் தந்தையையும் சிலர் மிரட்டி வருகின்றனர். என்னையும் என் தந்தையையும் இரக்கமில்லாமல் பொது இடத்தில் வைத்து மிருகத்தை அடிப்பதை போல் அடித்த பொலீஸார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இச்சம்பவத்தில் 8 பொலிஸார் ஈடுபட்ட நிலையில் பெயரளவிற்கு 2 பொலிஸாரை மட்டும் பணிஇடைநீக்கம் செய்துள்ளனர். இன்றைக்குள் அவர்கள் அனைவரின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை பொது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், எனக்கு நேர்ந்த அநியாயத்திற்கு நீதி கேட்டு வரும் 12ம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அவர் கூறினார். http://india.lankasri.com/view.php?22UMC202lOA4e2DmKcb240Mdd204Abc3mDVe42OlT023WAy2 |
Geen opmerkingen:
Een reactie posten