dinsdag 12 maart 2013

சக கைதிகளே ராம்சிங்கை அடித்து கொலை செய்தனரா? தாய் சந்தேகம்(வீடியோ இணைப்பு)


டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதியன்று ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி ஆபத்தான நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராம்சிங் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 5 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் இன்று காலை 5 மணி அளவில் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பான குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் மீதும் கொலை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, இயற்கைக்கு மாறாக தாக்குதல், கடத்தல், வழிப்பறி, தடயத்தை அழித்தல் என பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு: இந்நிலையில் ராம் சிங் தற்கொலை செய்து கொண்டது அவரது உறவினர்களுக்கும் சட்டத்தரனிக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராம்சிங்கின் தாயார் கூறுகையில், அவன் சாகும் முடிவை எடுத்திருக்க மாட்டான், சக கைதிகள் அடித்தே தூக்கிலிட்டுள்ளனர் என்று சந்தேகப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
ராம்சிங்
திகார் சிறை வளாகம்
ராம்சிங்கின் சட்டத்தரனி
ராம்சிங்கின் அப்பா

Geen opmerkingen:

Een reactie posten