தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 18 maart 2013

தமிழகத்தில் வலுப்பெறும் மாணவர் போராட்டம்: சென்னையில் ஆளுநர் மாளிகை இன்று முற்றுகை


இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளனர்.
இந்தியாவில், இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஆதரித்தும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் மற்ற மாநிலங்களிலும் மாணவர் போராட்டங்கள் தீவிரமாக பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten