dinsdag 5 maart 2013

இலங்கை அரசாங்க கடனுக்கு விண்ணப்பித்த பிபிசி சிங்கள ஊடகவியலாளர்களுக்கு மீண்டும் ஊடக ஒழுக்கப் பயிற்சி !


பி.பி.சி.சிங்கள செய்தி சேவையில் பணியாற்றிய நிலையில் இலங்கை அரசாங்கத்தின் வட்டியில்லா கடனுக்கு விண்ணப்பத்திருந்த இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களை மீண்டும் பி.பி.சி ஊடகப் பயிற்சிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கொழும்பு டெலிகிராப் வெளியிட்டுள்ளது.
பி.பி.சி உலக சேவையின் தயாரிப்பாளர் சந்தன கீர்த்தி பண்டார மற்றும் கொழும்பு செய்தியாளர் எல்மோ பெர்ணான்டோ ஆகியோர் தலா 12 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடனுக்கு விண்ணப்பத்திருந்தனர். இது பி.பி.சியின் ஒழுக்கக் கோவைக்கு எதிரானது.
இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான விசாரணை நடத்தப்பட்டதுடன், அவர்களை மீண்டும் பி.பி.சி ஊடக ஒழுக்கப்பயிற்சிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பி.பி.சி உலக சேவையின், சிங்கள சேவை செய்திய ஆசிரியர் பிரியத் லியனகே குறித்த இருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த முறைப்பாட்டை பிரித்தானிய ஊடகவியலாளர் துசி ரணதுங்க முன்வைத்திருந்தார்.

Geen opmerkingen:

Een reactie posten