dinsdag 5 maart 2013

தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை தூக்கில் போட வேண்டும்! தீக்குளித்த மணியின் இறுதி வார்த்தைகள் !


இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளி என அறிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூரில் நேற்று தீக்குளித்த மணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  இரவு 8.45 மணி அளவில் உயிரிழந்தார்.
மணி தீக்குளித்த விடயம் தொடர்பாக அவரது மருமகன் விஸ்வநாதன் கூறியதாவது:
எனக்கு நேற்று போன் செய்த மாமா மணி, எனது குடும்பத்தை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி வைத்துவிட்டார்.
ஏன் இவ்வாறு பேசுகிறார் என்று உடனே கிளம்பிச் சென்றேன். அதற்குள் தீக்குளித்து துடித்துக் கொண்டிருந்தார்.
நாங்கள் உடனே சென்னைக்கு கொண்டு செல்ல வோனில் ஏற்றி வந்து கொண்டிருந்தோம்.
அப்போது அவர் எனக்காக யாரும் அழக்கூடாது. கண்ணீர் சிந்தக் கூடாது. வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிடுங்கள்.
என்னுடைய மரணம் வீரமரணம்.
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை தூக்கில் போட வேண்டும்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்காகத்தான் உயிரை விடுகிறேன் என்று கூறியதாக தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten