தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 11 maart 2013

இஸ்லாமிய மதவெறியனின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான ஒரு சீர்திருத்தவாதி!!


இஸ்லாமிய மதவெறியனின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான ஒரு சீர்திருத்தவாதி
--------------------------
டாக்டர் அம்பேத்கரால் மிகவும் மதிக்கப்பட்ட மற்றொரு இந்து சமுதாய தலைவர் சுவாமி சிரத்தானந்தர் ஆவர். சுவாமி இந்து சங்கதன் இயக்கத்தின் முன்னணியில் நின்றவர் ஆவார். சங்கதன் ஏற்பட சாதியம் அழிய வேண்டுமென்பதில் திடமான உறுதி கொண்டவர் சுவாமிஜி அவர்கள்.

சுவாமி சிரத்தானந்தர் ஒரு அச்சமற்ற தேசபக்தர். கிலாபத் இயக்கத்தின் போது காந்திய இயக்கத்தில் இணைந்தவர். ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு பிறகு அமிர்தசரஸில் காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்த எவரும் துணிவுடன் முன்வராத போது தானே முன்னின்று அதனை நடத்தியவர். மகாத்மா காந்தி தலித்துகள் முன்னேற்றத்துக்காக காங்கிரஸுக்குள் உருவாக்கிய இயக்கத்தில் சுவாமியும் இணைந்திருந்தார்.

1922 இல் சுவாமி சிரத்தானந்தர் தலித்துகளுக்காக காங்கிரஸ் ஏற்படுத்திய உபகுழுவிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். தொடர்ந்து 19 ஆகஸ்ட் 1923 இல் வாரணாசியில் நடந்த ஹிந்து மகாசபை வருடாந்திர மாநாட்டில் அவர் ஹிந்து சமுதாயத்தில் சாதியத்தை அழிக்க ஒரு பெரும் திட்ட வரைவை அவர் முன் வைத்தார். இந்து மகாசபை கூட்டத்துக்கு வந்திருந்த சனாதனிகள் இதை கடுமையாக எதிர்த்தார்கள். இந்து மகாசபையே இரண்டாக உடையும் அளவுக்கு நிலை மோசமானது. சுவாமி சிரத்தானந்தர் கொண்டு வந்த தீர்மானம் இதுதான்:

இந்து சமுதாயத்திலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி செய்யும் விதத்தில் அவர்களை இந்து சமுதாயத்தில் ஒருங்கிணைந்த ஒரு பாகமாக கருதும் விதத்தில், இச்சான்றோர் சமுதாயத்தில் ஒன்றாக அவர்களை இணைக்கும் விதத்தில் எல்லா இந்துக்களும் கொண்ட இந்த சபையானது பின்வரும் விசயங்களை முன்வைக்கிறது:

(அ) மிகவும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரும் எல்லா பொது கிணறுகளிலிருந்தும் நீர் எடுக்க முடியும்.

(ஆ) பொது தண்ணீர் பந்தல்களில் எப்படி இந்து சமுதாயத்தின் மிக உயர்ந்ததாக கருதப்படும் உறுப்பினர்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறதோ அதே விதத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

(இ) ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் தாம் விரும்பும் எந்த பொதுப்பகுதியிலும் அவர்களது சமுதாய கூட்டங்களையும் விழாக்களையும் நடத்த வேறெந்த உயர்த்தப்பட்ட சமுதாயத்தினரையும் போல அனுமதிக்கப்பட வேண்டும்.

(ஈ) ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரது ஆண் பெண் இருபால் குழந்தைகளும் எல்லா அரசாங்க தேசிய மற்றும் இதர பிரிவு பள்ளிக்கூடங்களிலும் அனுமதிக்கப் படுவதுடன், அவர்கள் இந்து மற்றும் இந்துவல்லாத பிற குழந்தைகள் போலவே அமரவும் கல்வி கற்பிக்கப்படவும் வழி செய்யப்பட வேண்டும்.[13]

சுவாமிஜி வெறும் தீர்மானங்களுடன் நின்றுவிடக்கூடியவரல்லர். டெல்லியில் ‘தலித் உத்தார் சபா’ எனும் அமைப்பை ஏற்படுத்தி தலித் விடுதலைக்காக உழைத்தார். அவர் சேவை 23 டிசம்பர் 1926 இல் ஒரு இஸ்லாமிய மதவெறியனின் துப்பாக்கி குண்டுகளுக்கு அவர் பலியாகும் வரை தொடர்ந்தது.

டாக்டர் அம்பேத்கர் சுவாமி சிரத்தானந்தரை மிகவும் மதித்தார். அரசியல் கட்சியாக இந்து மகாசபையின் செயல்பாடுகளில் பாபா சாகேபுக்கு கடும் விமர்சனங்கள் இருந்தன. ஏனெனில் அக்கட்சியில் பல சாதியவாதிகள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் தலித்துகளின் உரிமையை காப்பாற்றுவதில், அவர்களுக்காக போராடுவதில் சுவாமி அவர்கள் தனித்தன்மையுடன் திகழந்தார். சுவாமி சிரத்தானந்தர் காங்கிரஸின் ஒடுக்கப்பட்டோருக்கான உபகமிட்டியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதை வேதனையுடன் பாபா சாகேப் இவ்வாறு விமர்சிக்கிறார்:


”ஏன்? இந்த திட்டம் ஏதோ சாதாரண அளவில் ஐந்து லட்சத்துக்கு அதிகம் செலவளிக்க வேண்டிய அவசியமில்லாத அளவில் இருக்க வேண்டுமென்பதாலா? சுவாமி சிரத்தானந்தரை அவர்கள் தங்கள் கமிட்டியில் சேர்த்ததன் மூலம் காங்கிரஸார் ஒரு தவறு செய்துவிட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு பெரும் திட்டத்துடன் சுவாமி அவர்களை எதிர்நோக்கும் போது அவர்கள் அதை விழுங்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் சமாளிக்க, அவரை செயல்படுத்த விடாமல் இருந்தனர்…சுவாமி சிரத்தானந்தரே ஒடுக்கப்பட்ட மக்களின் மிகவும் தீவிரமான போராளி. அவர் கமிட்டியில் இருந்திருந்தால் அவர் நிச்சயமாக ஒரு நல்ல விரிவான திட்டத்தை ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்ககா கொண்டு வந்திருப்பார். காங்கிரஸ் அவரை கமிட்டியில் விரும்பவில்லை என்பதும் அவர் கொண்டு வரும் திட்டங்கள் குறித்து அஞ்சியது என்பதும் அவருக்கும் அன்றைய காங்கிரஸ் பொது செயலாளரான பண்டிட் மோதிலால் நேருவுக்குமான கடிதப்போக்குவரத்திலிருந்துபுரிகிறது

Geen opmerkingen:

Een reactie posten