தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 april 2013

சைப்பிரஸ் நாட்டிற்கு இலங்கையிலிருந்து தொழிலாளர்களை அனுப்புதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்!


சைப்பிரஸ் நாட்டிற்கு இலங்கையிலிருந்து தொழிலாளர்களை அனுப்பும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சைப்பிரஸ் நாட்டில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சைப்பிரஸில் பாரிய நிதி நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீண்ட ஆய்வு நடாத்தி, தொழிலாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது சைப்பிரஸில் கடமையாற்றி வரும் இலங்கையர்கள் சம்பளப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்களா என்பது ஆராயப்படும் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten