உதயன் நாளிதழின் கிளிநொச்சி விநியோகப் பணியகம் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.
கிளநொச்சியில் உள்ள உதயன் விநியோகப் பணியகம் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில். மூன்று பணியாளர்கள் காயமடைந்தனர்.
அத்துடன் விநியோக வாகனங்களும், விநியோக் பணியகமும் அடித்த நொருக்கப்பட்டன.
சிறிலங்கா அரசின் பின்புல ஆதரவுடனேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதலுக்கு எதிராக சிறிலங்காவிலும், தமிழ்நாட்டிலும் கடும் கண்டனம் எழுந்துள்ள அதேவேளை, வொசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களும், பெரும்பாலான இந்திய ஊடகங்களும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.
அதேவேளை, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் பர்தா பாஸ் என்ற ஹிந்தி நாளிதழின் ஆங்கில இணையப் பக்கத்தில், சிறிலங்காவில் இந்திய நாளிதழ் பணியகம் தாக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten