vrijdag 9 augustus 2013

தமிழீழ போராட்டத்தில் ஈழத் தமிழர்களுடன் இணைத்து நிற்கும் மொரிசியஸ்

தமிழீழ போராட்டத்தில் ஈழத் தமிழர்களுடன் இணைத்து நிற்கும் மொரிசியஸ்

Updated 13 minutes ago
தமிழீழ போராட்டத்தில் ஈழத் தமிழர்களுடன் இணைத்து நிற்கும் மொரிசியஸ் நாட்டு தமிழர்கள் (Photos)



தமிழீழ மக்களின் விடுதலை அடைய வேண்டும், தமிழர்கள் விடுதலை அடையவேண்டும் தமிழ் வளர வேண்டும் என்று ஈழத் தமிழர்களுடன் இணைந்து நிற்கும் மொரிசியஸ் நாட்டு தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைக்காக தமது வாழக்கையை தியாகம் செய்த தமிழ் ஈழ மக்கள் நினைவாக, நினைவு தூபி ஒன்றை மொரிசியஸ் தலைநகர் அருகில் நிறுவியுள்ளார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்முடன் இணைத்து நிற்கும் மொரிசியஸ் வாழ் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, எம்முடன் சேர்ந்து செயல்படும் மொரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டிணைப்பிற்கும், மொரிசியஸ் அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

இன்று அநீதிக்கு எதிராக உலகத் தமிழர்களின் குரல் எழுந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நினைவு தூபி காட்டி நிற்கிறது.

தமிழீழ தேசிய நினைவு சின்னங்கள் தமிழீழத்தில் அழிக்கப்பட்டாலும் தமிழர்கள் வாழும் நாடெங்கும் உருவாகும் நினைவு சின்னங்கள் தமிழர்களை இணைக்கும் பாலங்கள் ஆகி, ஓங்கி ஒலிக்கும் தமிழர் குரல் தமிழர்களுக்கு விடுதலை பாதையினை அமைக்கும்.








Geen opmerkingen:

Een reactie posten