maandag 1 augustus 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும்: ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்

[ ஞாயிற்றுக்கிழமை, 31 யூலை 2011, 12:14.34 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமிழ்ச் சமூகத்தின் மீது மேற்கொண்ட யுத்தக் குற்றச்செயல்களுக்காக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசாங்கத்திடம், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
2008 – 2009 காலப்பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து அரசாங்கத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அண்மையில் ஐ.நா. அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.
வடக்கு கிழக்கு கரையோரப் பகுதியான யுத்த வலயத்திலும் யுத்த வலயமற்ற பகுதியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வைத்தியசாலை உட்பட பல பகுதிகளில் ஷெல் வீச்சுக்களை மேற்கொண்டது.
அத்துடன், பொதுமக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதுடன், அவர்களுக்கான மனிதநேய உதவிகளையும் வழங்க மறுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு தமிழக சட்டசபையில் கடந்த ஜுன் மாதம் ஜெ.ஜெயலலிதா தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜெ.ஜெயலலிதா, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எம்.பி.கள் இது குறித்து விவாதிப்பார்களென கூறினார்.
ஆம் இலங்கைத் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் யுத்தக் குற்றச்செயல்கள் குறித்து தமிழக சட்டசபையில் எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயமாக விவாதிப்பார்கள் என அவர் கூறினார்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறும் நாம் வலியுறுத்துகின்றோம். இது குறித்து எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிப்பார்கள் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten