அப்படியானால் ரமேஷ் பற்றிய வீடியோ போன்ற கொலைக்களம் என்று சனல் நான்கு வெளியிட்ட ராணுவ மீறல்கள் அனித்தும் பொய் என்கிறீர்களா??உங்கள் வார்த்தைப்படி அரசுக்கு எதிரான யுத்த மீறலுக்கான ஆதாரங்கள் அனைத்துமே பொய்யாகிப்போகும்,அனைத்தும் பொய் என்றுதானே அரசும் சொல்கின்றது,தலைவர் சாகாவிட்டால் அவரை கொண்டுவந்து நிரூபியுங்கள்,இப்படி செய்வது அரசுக்கே ஆதாயம் தரும்,உண்மையான ஆதாரங்கள் உங்களாலேயே பொய்யாக்கப் படின் இழப்பு தமிழருக்கே!நீங்கள் அரசின் ஐந்தாம்படையில்லையே!!
தலைவா் பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்ட வீடியோவை வெளியிடும் சா்வதேச சக்திகள் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்களையும் விசமாக விதைத்தே வருகின்றது. யுத்தத்தின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடையும் நிலைவந்துவிட்டது என்பதனை அறிந்து கொண்ட அனைத்துப் போராளிகளும் தாம் முன்னா் போராளிகளாக இருந்தனா் என்பதனை எவ்வளவுக்கு மறைக்கமுடியுமோ அவ்வாளவுக்கு மறைத்துக் கொண்டே இராணுவக கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றனா் என்பதனை முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேவந்த பொது மக்களிடம் இருந்து தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் போராட்டமே அழிந்து எதிரியிடம் சரணடையும்போது பாலச்சந்திரனுடன் ஐந்துபோ் மெய்ப்பாதுகாவலா்களாக சென்றிருப்பார்கள் என்பது திட்டமிட்டு கேவலப்படுத்துவதற்காக உருவாக்கப்படும் கதையாகவே நான் கருதுகின்றேன். அதுபோன்று தலைவா் சரணடைந்தார் என்பதற்கோ அல்லது அதன் பின்னா் கொல்லப்பட்டதாக கூறுப்படுவதனை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை. அவ்வாறு வித்தி போன்ற நயவஞ்சகா்களதும் அரசதரப்பினதும் கட்டுக்கதைகளைக்கொண்டு வெறும் ஊகத்தினடிப்படையில் குறித்த சில சா்வதேச சக்திகள் தயாரிக்கும் கதைகளை வைத்து சில தமிழ் இணையங்களும் அக்கதைகளை உண்மைபோனறு எழுதுகின்றன.
சா்வதேச சக்திகள் செய்யும் சதிகளை தயவு செய்து அப்பலப்படுத்துங்கள். இன்று ஐநாவில் இலங்கை அரசும் மேற்குநாடுகளும் ஆடும் நாடகத்தினை உண்மை என்று நம்பி 30 ஆண்டுகால தியாங்கங்களை கொச்சைப்படுத்தவே இந்த சா்வதேச ஊடகங்கள் இவ்வாறான கதைகளை வெளியிடுகின்றன என்பதனை தயவு செய்து மக்களுக்கு தெளிவு படுத்துங்கள். இவா்களால் வெளியிடப்பட்ட எனைய அனைத்துக் காட்சிகளும் உண்மையானவையாக இருப்பதனால் அதனைத் தொடா்ந்து இவா்கள் இந்தப் பொய்களை கூறினால் மக்கள் முழுமையாக நம்புவார்கள்.
இதனால் பேராட்டத்தில் தியாங்கள் என்பதனை புனிதமாகக் கருதி மதித்த அதே மக்களே அந்தப் போராட்டத்தை நிராகரித்து டக்களஸ் கருணா பிள்ளையான் போன்றவா்களுக்குப் பின்னால் மக்கள் தாமாகவே விரும்பிச் செல்லும் நிலையை உருவாக்கவே மேறகுலகம் முயற்சி்க்கின்றது.
தயவு செய்து மக்களை விழிப்படைய செய்யுங்கள். உங்களிடம் சிரம்தாழ்ந்து வேண்டுகின்றேன்.
கஐன்
Geen opmerkingen:
Een reactie posten