dinsdag 13 maart 2012

ஐ.நா விவகாரமூடாக ஜெயலலிதாவை வளைத்துப்போடத் திட்டம் !


இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா ஒரு பிரேரணையை முன்வைக்க இருப்பதும், அதனை முறியடிக்க இலங்கை ஒருபக்கம் படாத பாடு பட்டுக்கொண்டு இருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் அது நடந்துவிடவேண்டும் என இலங்கை அரசு செய்ய முடியாத பல காரியங்களைச் செய்துவருகிறது. ஆனால் இந்த சைக்கிள் காப்பில் சோனியா காந்தி மட்டும் தனது நரித்தனத்தைக் காட்டத் தவறவில்லை. சமீபத்தில் நடந்த தேர்தல் சிலவற்றில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது யாவரும் அறிந்ததே. இதனை ஈடுகட்டவும், தற்போது தமிழ் நாட்டில் மிகுந்த செல்வாக்கோடு இருக்கும் செல்வி ஜெயலலிதாவை தன் பக்கம் இழுக்கவும் சோனியா புதிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்.

செல்வி ஜெயலலிதா ஈழத் தமிழர் தொடர்பான தனது நிலைப்பாட்டை சற்று மாற்றியுள்ளமை யாவரும் அறிந்ததே. இதற்கு சனல் 4கின் காணொளியும் ஒரு காரம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு மனம் மாறியுள்ள செல்வி ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தமிழ் நாட்டிற்கு இலங்கையைச் சேர்ந்த பிரமுகர்கள் வருவதாயின் தனக்கு இந்திய அரசு முன்கூட்டியே அறிவிக்கவேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனை உடனே தாம் கருத்தில் கொள்வதாகவும், மற்றும் இதனை ஒரு பாரிய விடையமாக எடுத்து, படு முக்கியத்தும் கொடுத்து எஸ்.எம்.கிருஷ்ணா செய்திகளை வெளியிட்டிருந்தார்.

அதுபோக இப்போது, ஐ.நாவில் அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணையை இந்தியா எதிர்க்கக்கூடாது என மற்றுமொரு கடிதத்தை செல்வி ஜெயலலிதா டெல்லிக்கு அனுப்பியுள்ளார். இதனையும் காங்கிரஸ் அரசு ஒரு பெரியவிடையமாக்கி படு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இது குறித்து பேசுவதற்கும் காங்கிரஸ் தயாராக உள்ளதாக சில சமிஞ்சைகள் விடுக்கப்பட்டுள்ளதாம். காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் இது குறித்து தாம் ஜெயலலிதாவோடு பேச முற்பட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன் உஷாரான ஜெயலலிதா இதனைத் தட்டிக் கழித்துள்ளார் என சில செய்திகள் தற்போது கசிந்துள்ளது. செல்வி ஜெயலலிதாவோடு எப்படியாவது சமரசம் பேச ஏதாவது ஒரு கதவாவது திறக்காதா என காங்கிரஸ் ஏங்கி நிற்கிறது... இதிலும் ஈழப் பிரச்சனையை ஈனத்தனமாக அது பயன்படுத்த நினைக்கிறது !

Geen opmerkingen:

Een reactie posten