donderdag 7 maart 2013

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 30 பேர் கைது


சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 30 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் வைத்து குறித்த சட்டவிரோத அகதிக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் அவுஸ்திரேலியா நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்ததாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அகதிக் கோரிக்கையாளர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten