maandag 11 maart 2013

தமது பிள்ளைகள் அரசியலில் ஈடுபடமாட்டார்கள் - சந்திரிக்கா


இலங்கையில் குடும்ப அரசியல் இடம்பெறுவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனால் தமது இரண்டு பிள்ளைகளையும் அரசியலை தெரிவு செய்ய வேண்டாம் என்று தாம் அறிவுரை வழங்கி இருப்பதாகவும் அவர்? தெரிவித்துள்ளார்.
தாம் ஆட்சியில் இருக்கும் போதே தமது சகோதர்கள் பிள்ளைகள் எல்லோரும் அரசியலில் இருப்பதை தாம் விரும்பவில்லை.
தமது பிள்ளைகளும் இலங்கை மீது பற்று வைத்துள்ளனர்.
எனினும் இலங்கைக்கு சேவை செய்ய அரசியல் தவிர வேறு பல்வேறு வழிகள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் தமது இரண்டு ஜனாதிபதி தவணையும் நிறைவடைந்துள்ள நிலையில், தாம் வெவ்வேறு வழிகளில் இலங்கைக்கு சேவையாற்றி வருவதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
2ம் இணைப்பு
அரசியல்வாதிகள் நாட்டு வளங்களை சுரண்டுகின்றனர் – சந்திரிக்கா
தற்போதைய அரசியல்வாதிகள் நாட்டின் வளங்களை சுரண்டி வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியலை பிரதான வருமான வழியாகக் கொண்டு சிலர் செயற்படுகின்றனர்.
சமூகத் தொண்டு ஆற்றுவதற்கு அரசியல் அதிகாரம் அவசியமில்லை.
சமூக சேவை மக்கள் தொண்டு என்ற போர்வையில் அரசியல்வாதிகள் நாட்டின் வளங்களை சுரண்டி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten