தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 11 maart 2013

இலங்கையின் கணனிக்குற்றவியல் சட்டத்தில் திருத்தம்


இலங்கையின் கணனி குற்றவியல் சட்டத்தை சீர்த்திருத்தம் செய்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணனி குற்றவியல் சட்டம் 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இது உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அது சீர்த்திருத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் இலங்கையின் 50க்கும் மேற்பட்ட அரசாங்க இணையத்தளங்கள் இணைய முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் மத்தியில் கணனி அறிவு 39 சதவீதமாக காணப்படுகின்ற அதேநேரம், பெரும்பாலான மக்கள் இணைய முடக்கல் தொடர்பில் அறியாதவர்களாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

Geen opmerkingen:

Een reactie posten