மாத்தளை வைத்தியசாலையில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அறிக்கை அடுத்தவாரம் அளவில் வெளியிடப்படும். களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் ராஜ் சோமகெதர இதனைத் தெரிவத்துள்ளார்.
இதற்கிடையில் ஜே வி பி நாடாளுமன்னற அனுரகுமார, மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட சடலங்கள் இயற்கையாக மரணித்தவர்களுடைது இல்லை என்று தெரிவித்திருந்தார்.
தமக்கு இது தொடர்பில் இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களுடைய சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதனை நிராகரித்துள்ள பேராசிரியர், இறுதி அறிக்கையின் ;பின்னர் இது குறித்து உறுதியாக கூற முடியம் என்று கூறியுள்ளார்.
இந்த அறிக்கை எதிர்வரும் 20ம் திகதி அளவில் வெளியிடப்படவுள்ளது.
இந்த பகுதியில் இருந்து 154 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten