டெசோ அமைப்பு நாளை நடத்துவதாக அறிவித்துள்ள வேலை நிறுத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட மனு மீது இன்று பிற்பகலில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இலங்கை தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட டெசோ அமைப்பு, இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஐ.நா. தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பதை வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் முழு வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தது.
இதனை எதிர்த்து வழக்குரைஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை இன்று காலை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார், மனுவில் எதிர்மனுதாரரைக் குறிப்பிடுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து, மனுவில் டெசோ அமைப்பை எதிர்மனுதாரராக பதிவு செய்து உடனடியாக மனு தாக்கல் செய்வதாக பாலசுப்பிரமணியம் கூறினார்.
இதையடுத்து, மனு மீதான விசாரணையை பிற்பகல் 2.15 க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார் நீதிபதி.
Geen opmerkingen:
Een reactie posten