maandag 11 maart 2013

Police arrested Loyola College students

உண்ணாவிரதம் இருந்த கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவமனையில் கட்டாய சிகிச்சை: ஆதரவாளர்கள் பலர் கைது!
சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த 8 மாணவர்கள், மனித உரிமையை மீறிய இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்து மூன்று நாட்களை முடித்து நான்காவது நாளை ஆரம்பித்திருந்தனர்.
அவர்களுக்கு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவரும் வரை தங்கள் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்றும் அவர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், இன்று இந்திய நேரப்படி நள்ளிரவு உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு சென்ற பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி ராயாபேட்டை மருத்துவமனைக்கு எடுத்துசென்றனர்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களை கைது செய்து, அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்துவைத்துள்ளனர். மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியதை அடுத்து, மாணவர்கள் பொலிஸார் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

Police arrested Loyola College students
[ Monday, 11 March 2013, 08:26.25 AM GMT +05:30 ]
Eight students of a Chennai Loyola College college have continuing their ‘fast-unto-death’ over the Sri Lankan Tamils issue for fourth day.
Politicians and members of the Tamil organisations grant their support for these students.
Students announced they will never stop the strike until central government to hold discussion on this issue.
Group of police officials visited the protest site last night and taken the students towards Rayampedu hospital.
Police also arrested group of people supported the students and detain them at the wedding hall.

http://eng.lankasri.com/view.php?22eOld0acp5YOd4e2UMC302cAmB3ddeZBmK202eWAA2e4SY5naca3lOA42


நம் உடலை மாணவர்கள் தான் எடுக்கவேண்டும்! அரசியல் கட்சிகளிடம் கையளிக்கக் கூடாது: - உண்ணாவிரத போராட்ட மாணவன் செம்பியன்
[ ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 10:28.04 PM GMT ]
ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மூன்றாவது நாளையும் முடித்து நான்காவது நாளை நெருங்கிக்கொண்டிருக்கும் தமிழக லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் மாணவர் போராட்டமாக உருமாறியிருக்கின்றது.
உண்ணாவிரதம் இருந்து வரும் எட்டு மாணவர்களுக்கும் அரசியல் பிரமுகர்கள் பலர் ஆறுதல் தெரிவித்து வருகின்றபோதிலும் அம்மாணவர்களோடு அவ்விடத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து அப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுள் ஒருவரான செம்பியன் தெரிவிக்கையில்,
தாம் மேற்கொண்டிருக்கும் இவ் உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இப்போராட்டமானது முழுக்க முழுக்க மாணவர்களாகிய எம்மால் தீர்மானிக்கப்பட்டு எடுத்த முயற்சியே ஆகும். இதற்கு எந்தவொரு இயக்கமோ, கட்சியோ உதாரணமாக இல்லை.
எமக்கு ஆதரவு தெரிவிக்க வருபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் எமக்கு பின்னால் வரவேண்டுமே தவிர, யாருக்கு பின்னாலும் மாணவர்களாகிய நாம் போவதாக இல்லை.
டெசோ அமைப்போடு கூட்டுசேர்ந்து இப்போராட்டத்தை வலுவாக்கப்போகின்றீர்களா என செய்தியாளர் கேட்டவேளை,
தாம் டெசோ அமைப்போடு மட்டுமல்ல, வேறெந்தவொரு அமைப்புடனோ, இயக்கத்துடனோ, கட்சியுடனோ சேர்ந்து போராடவில்லை. ஈழத்தமிழர்களுக்காக மாணவர் போராட்டமாக ஆரம்பித்திருக்கின்றோம். மாணவர் போராட்டமாகவே வென்று முடிப்போம் என உறுதியுடனும் நம்பிக்கையுடனும் திடமாக கூறியிருந்தார்.
எப்போது இப்போராட்டத்தை முடித்துக்கொள்வீர்கள் என கேட்க,
இவ் எட்டு மாணவர்களின் உயிர் பிரியும் வரை போராடுவோம். நாம் வைத்திருக்கும் கோரிக்கைகளை இந்திய அரசு அதிகாரபூர்வமாக நிறைவேற்றித் தரும்வரை இப்போராட்டம் தொடரும் என்றார் மாணவன் செம்பியன்.
இப்போராட்டத்தில் நம் உயிர் பிரிந்தால் நம் உயிரற்ற உடலை தமிழ் மாணவர்கள் தான் எடுத்துச் செல்லவேண்டும், எந்தவொரு அரசியல் இயக்கத்திடமும் கையளிக்கக்கூடாது என மேலும் தெரிவித்துள்ளார்.

திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?
[ ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 11:01.10 PM GMT ]
இந்தியாவின் மௌனங்களையும், துரோகங்களையும் தகர்த்துக்கொண்டு திலீபன்கள் களத்திற்கு வந்தவிட்டார்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களது போராட்டமும், அந்த அறப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவும் இதனையே உணர்த்துகின்றது.
இதே இந்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் தியாகதீபம் திலீபன் அவர்களது உயிரும் பறிக்கப்பட்டது.
தனது கட்டுக்குள் அடங்க மறுத்த சிங்கள ஆட்சியாளர்களை அடிபணிய வைக்கும் நுழைவாயிலாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிட்ட இந்திய காங்கிரஸ் ஆட்சியாளாகளது கோர முகம் ஈழத் தமிழர்களுக்குப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்கள் அது. சமாதானப் படை என்ற பொய் முகத்தோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்தியப் படைகள் மெல்ல, மெல்லத் தங்களது இலக்கினை நோக்கி நகர்ந்தார்கள். அந்த இலக்கினை அடைவதற்கு சிங்களம் கேட்ட விலை ஈழத் தமிழர்கள் மீதான தனது மேலாதிக்க அங்கீகாரம்.
அந்த வேளையில், இந்திய - இலங்கைக் கூட்டுச் சதிக்குள் தமிழீழம் சிக்கிக்கொண்டதை உணர்ந்துகொண்ட திலீபன், காந்தி தேசத்தை காந்தியின் பாதையில் சென்று அதன் துரோகங்களைத் தடுக்க முனைந்தார்.
* மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
* சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
* அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
* ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
* தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.


என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று நல்லூர் வீதியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
காந்தி தேசம் தனது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும். தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கும் என்ற திலீபனின் நம்பிக்கை பொய்த்துப் போனது.
அன்றைய காங்கிரஸ் அரசால் 26 செப்ரம்பர் 1987 அன்று அவர் கொலை செய்யப்பட்டார். அவர் மெல்ல, மெல்லச் சாவினைத் தழுவுவதை அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ரசித்துக்கொண்டிருந்தார்கள்.
வரலாறு மன்னிக்க முடியாத அந்தத் தவறினை இழைத்த காங்கிரஸ் ஆட்சியாளர்களது கொடூரங்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. அது முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் நீண்டே செல்கின்றது.
ஒரு தமிழனின் அகிம்சைப் போர் தோற்கடிக்கப்பட்டதால், விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
ஒரு கால் நூற்றாண்டு கடந்த திலீபனது போராட்டத்தை இன்று லயோலா கல்லூரி மாணவர்கள் மீண்டும் கையேற்றிருக்கிறார்கள்.
இது ஒரு வரலாற்று மாற்றத்திற்கான தெளிவான செய்தி.
வைகோ அவர்கள் கூறியது போல், இது கந்தகக் கிடங்கில் வீழ்ந்துள்ள தீப்பொறி. அதனைக் கவனிக்கத் தவறினால், பின்னர் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.
இப்படி ஒரு தீப்பொறிதான் துனீசியாவின் அதிகார பீடத்தையே புரட்டிப் போட்டது. எகிப்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. லிபியாவின் சர்வாதிகாரம் நொருக்கப்பட்டது. சிரியாவில் இப்போதும் புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரிகின்றது. இந்திய ஆட்சியாளர்களும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடவும் தவறினால் வரலாறு தீர்ப்பினைத் திருத்தி எழுதிவிடும்.
இந்தத் திலீபன்களது நியாயமான உணர்வினைப் புரிந்து கொள்ளாது, எங்கள் திலீபனைக் கொன்றது போல் நிலை மீண்டும் உருவானால், தமிழக மண்ணில் இனி திலீபன்கள் உருவாக மாட்டார்கள். பிரபாகரன்களே உருவாகுவார்கள். இதனை இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
புரட்சியாளர்கள் தாமாகவே உருவாவதில்லை. அவர்கள் நீதியற்ற ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் உருவாக்கப்படுகின்றார்கள்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் மீண்டும் திலீபன்கள் உருவாகிவிட்டார்கள். பிரபாகரன்கள் எப்போது? என்பதே வரலாற்றாளர்களின் கேள்வியாக உள்ளது.


- இசைப்பிரியா -

Geen opmerkingen:

Een reactie posten