புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தை சந்தித்துப் பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பின்னர், சிறிலங்கா அதிகரித்து வரும் இந்திய எதிர்ப்புணர்வு குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகிறது. முன்னதாக, ரணில் விக்கிரமசிங்க, பாஜக தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஸ்மா சுவராஜ் ஆகியோரையும் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten