donderdag 4 april 2013

இனப்படுகொலை செய்த நாடுகளுக்கு ஆயுத விற்பனை தடை! இலங்கையுமா?


ஐக்கிய நாடுகள் சபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்வதேச ஆயுத விற்பனையை கட்டுப்படுத்தும் தீர்மானம் ஒன்றே நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுத வன்முறைகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு ஆயுதங்கள் பயன்படுத்தும், மனிதாபிமான செயற்பாடுகளுக்கு எதிரான குற்றங்கள் மேற்கொள்ளு, பயங்கரவாத செயல்கள் மேற்கொள்ளப்படும் நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது தடை செய்யப்படும் தீர்மானமே, ஐக்கிய நாடுகள் சபையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுத கோரல் உள்ள நாடுகளுக்கு வருடாந்தம் 70 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 154 நாடுகளும் எதிராக 3 நாடுகளும் வாக்களித்தன. 23 நாடுகள் வாக்கெடுப்பின்போது பங்கேற்கவில்லை.
ஆயுத விற்பனையில் முன்னணியில் உள்ள சீனா மற்றும் ரஷ்ஷிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten