வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும் அமெரிக்கா | |
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 07:11.53 மு.ப GMT ] | |
எனவே, இப்போர் பதட்டத்தை தணிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அதற்காக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஆசிய நாடுகளான தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு சென்று தலைவர்களை சந்தித்து போர் பதட்டத்தை தணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மேலும் ஜப்பான் சென்ற அவர், அந்நாட்டு பிரதமர் ஷின்ஷோ அபே மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், அமெரிக்கா திரும்பும் வேளையில் ஜான்கெர்ரி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘வடகொரியாவுடன் அதிகாரப்பூர்வமான நம்பகத்தன்மை வாய்ந்த திறந்த மனதுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு வடகொரியா இன்னும் பதில் தெரிவிக்கவில்லை. மவுனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
|
Geen opmerkingen:
Een reactie posten