vrijdag 12 april 2013

யாழ்.பல்கலைக்கழக தொழுகை கூடத்திற்கு கழிவு ஒயில் வீசியவர்கள் அரச புலனாய்வாளர்களே!- பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்


குற்றங்கூற முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன்! சிங்கள திரைப்படத்துறையைச் சேர்ந்த தமிழ் நடிகர்
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 02:51.59 PM GMT ]
தமிழக திரைப்படக் கலைஞர்கள் இலங்கைக்கு எதிராக நடத்திய போராட்டத்துக்கு மாறாக சிங்கள திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் ''திடசங்கல்ப பூசை'' என்ற பெயரில் ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த போராட்டம் அமைதியாக நடந்தது.
தமிழக திரைப்படக் கலைஞர்கள் இலங்கை நிலவரம் குறித்து தவறான கருத்தை கொண்டிருப்பதாகக் கூறி, அதனை தெளிவுபடுத்துவதற்காகவே இந்தப் போராட்டத்தை தாம் நடத்தியதாக அதில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர்.
ஆயினும் இது தமிழக திரைப்படக் கலைஞர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல என்று அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள திரைப்படத்துறையைச் சேர்ந்த தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் கூறினார்.
தாம் சிங்கள திரைத்துறையில் எந்தவிதமான பாகுபாடில்லாமல் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை போர் இழப்புக்கள் குறித்து தனக்கு குற்ற உணர்வு இருந்தாலும், தன்னை சிங்கள திரைத்துறை நல்ல நிலையில் வைத்திருப்பதால், அது குறித்து வெளிப்படையாக குற்றங்கூற முடியாத இக்கட்டான நிலையில் தான் இருப்பதாகவும் அவர் கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவ தாம் சில சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.


யாழ்.பல்கலைக்கழக தொழுகை கூடத்திற்கு கழிவு ஒயில் வீசியவர்கள் அரச புலனாய்வாளர்களே!- பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 04:51.00 PM GMT ]
யாழ்.பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சகோதர்கள் தொழுகை செய்யும் கூடத்தில் கழிவு ஒயில் ஊற்றியவர்கள் அரச புலனாய்வுப் பிரிவினர் என யாழ்.பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இலக்கத்தகடு அற்ற மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் தங்களை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கோரினர். இருந்தும் உள்ளே அனுமதிக்க முடியாது என அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அவர்கள் உடனே சென்று விட்டார்கள். பின்னர் அவர்கள் ஏதே வகையில் மதில் சுவற்றில் ஏறிக் குதித்து உள்ளே வந்து தொழுகை அறைக்கு சென்று கழிவு ஒயிலை வீசிச் சென்றன்றுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் தாங்கள் தெரிவித்தாகவும், இது தொடர்பில் தாங்கள் பார்த்துக் கொள்வதாக நிர்வாகத்தினர் தெரிவித்தாக யாழ்.பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினர் கூறினர்.
யாழ்.பல்கலைக்கழகத்தை மாவீரர் தினத்திலிருந்து அரச புலனாய்வுப் பிரிவினர் தங்களது கண்காணிப்பு வலைமைப்புக்குள் கொண்டு வந்துள்ளதுடன் பல்கலைக்கழகத்திற்கு அருகில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மிகவும் அவதானமாக அவதானித்து வருவதாக தெரியவருகின்றது.
தொடர்புடைய செய்தி

Geen opmerkingen:

Een reactie posten