vrijdag 5 april 2013

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டும்!- அஸ்கிரிய,மல்வத்து பீடாதிபதிகள்!!


முக்கியமான தருணங்களில் இலங்கைக்கு பாகிஸ்தான் உதவியுள்ளது: ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 02:12.45 AM GMT ]
பாகிஸ்தான் அரசாங்கம், இலங்கைக்கு முக்கியமான தருணங்களில் உதவியாக இருந்திருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள பாகிஸ்தானின் வெளியுறவுகள் அமைச்;சர் ஜிலால் அபாஸ் ஜிலானியுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு எதிராக பாகிஸ்தான் வாக்கினை பிரயோகித்திருந்தது.
இதற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, பாகிஸ்தானின் தொடர்சியாக இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றதாகவும் தெரிவித்தார்


நற்பெயரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல படையினருக்கும் உண்டு!- ஜெகத் ஜயசூரிய
[ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 02:10.19 AM GMT ]
இராணுவம் மீதான நற்பெயரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இராணுவத்துக்கே இருப்பதாக இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
வெற்றிலைக்கேணியில் உள்ள 55ம் படைப்பிரிவின் தலைமையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இராணுவத்தினர் கடமையாற்றுவது அவசியமாகும். அதேவேளை இராணுவத்தின் நற்பெயர் பாதிக்கப்படாத வகையிலும் இராணுவத்தினர் செயற்பட வேண்டும்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இராணுவத்தினரின் மனநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளையம் முன்னெடுக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டும்!- அஸ்கிரிய,மல்வத்து பீடாதிபதிகள்
[ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 01:53.18 AM GMT ]
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய வேண்டுமென கண்டி அஸ்கிரி மல்வத்து பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் ஆட்சி முறைமையே இந்த நாட்டுக்கு மிகவும் பொருத்தமானது.
நிறைவேற்று அதிகார முறைமையை ரத்து செய்யுமாறும் விருப்பு வாக்கு தேர்தல் முறைமையை ரத்து செய்யுமாறும் விடுக்கப்படும் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளது.
நாம் கூறுகின்ற ஆலோசனைகளை செவிமடுப்பதுடன் விட்டு விடுகின்றனர்.
தகுதியானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படுவதில்லை.
தூதுவர் உயர்ஸ்தானிகர் பதவிகளுக்கு தகுதியானவர்கள் அனுப்பி வைக்கப்படுவதில்லை.
அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வாக்குறுதிகள் அளிக்கப்படும் போதும், அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை என மாநாயக்கத் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கம்
[ வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013, 01:45.08 AM GMT ]
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் போன்ற காரணிகள் தொடர்பில் இதன் போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
வெளிநாட்டு தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தக் கேள்விகளுக்கும் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.


Geen opmerkingen:

Een reactie posten