தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

கொழும்பு துறைமுகத்தில் பிலிபைன்ஸ் பிரஜை வெட்டிக் கொலை !


கொழும்பு துறைமுக பண்டாரநாயக்க பகுதியில் நங்கூரம் இடப்பட்டுள்ள தாய்வான் நாட்டுக்குச் சொந்தமாக கப்பலில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. குறித்த கப்பலில் இருந்த சேவையாளர்கள் இடையே நேற்று(11) அதிகாலை 12.45 - 02 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் இம்மோதல் ஏற்பட்டுள்ளதாக மேலும் அறியப்படுகிறது. மோதலில் 37 வயதுடைய பிரேபின் மெகலோன்ஸ் பொனியுஸ் என்ற பிலிபைன்ஸ் நாட்டு பிரஜை கொல்லப்பட்டுள்ளார்.

புதுக்கடை இலக்கம் 6 நீதவான் மரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். இந்த மோதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6 பிலிபைன்ஸ் பிரஜைகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து கொழும்பு துறைமுக பொலிஸார் விசாரதணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten