தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 31 maart 2011

விசேட அறிக்கை: மேற்குலகம் ஆதரிக்கும் லிபிய அல்கைதா

அமெரிக்க அரசுக்கு தெரிந்த ஒரு உண்மை, பொது மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றது. லிபியாவில் இடம்பெற்றது மக்கள் எழுச்சி அல்ல. மாறாக கடாபி அரசுக்கு எதிரான அல்கைதாவின் கிளர்ச்சி. ஏற்கனவே தொன்னூறுகளில் இதே கிழக்கு லிபிய பிரதேசத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய- மத அடிப்படைவாத சக்திகளின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. இன்று கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசி நகரமும், அதன் சுற்று வட்டாரமும் அல்கைதா விசுவாசிகளைக் கொண்டது. ஈராக்கில் இஸ்லாமிய அரசமைக்கும் நோக்குடன் அனுப்பப்பட்ட லிபிய அல்கைதா உறுப்பினர்கள், இதே கிழக்கு லிபிய பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். அவர்களது பெயர், ஊர், பற்றிய விபரங்கள் ஏற்கனவே அமெரிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் உள்ளன. லிபியாவில் அல்கைதா கிளர்ச்சியை பாதுகாப்பதற்காக, நேட்டோ படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பிரான்ஸ் உட்பட சில மேற்கத்திய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட, “இடைக்கால அரசில்” அங்கம் வகிக்கும் அரைவாசிப் பேர் அல்கைதாவுடன் தொடர்புடைவர்கள். இவர்களது பெயர் விபரங்கள் “பாதுகாப்பு காரணங்களுக்காக” இன்னும் அறிவிக்கப் படவில்லை.
அக்டோபர் 2007, ஈராக்கில் சிரிய எல்லையோர நகரமான Sinjar ரில், அமெரிக்க படைகளின் இராணுவ நடவடிக்கையின் போது பல முக்கிய ஆவணங்கள் அகப்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த West Point Military Academy அந்த ஆவணங்களை ஆராய்ந்தது. ஈராக்கிற்கு எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்கைதாவினால் திரட்டப்பட்டனர், அவர்களின் ஊர், பெயர் விபரங்கள் அந்த ஆவணத்தில் இருந்துள்ளன. அதிகமான போராளிகள் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த இடத்தில் லிபியாவைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக டார்ணா நகரைச் சேர்ந்த போராளிகளே அதிகம். பெங்காசிக்கும், தொவ்றுக் நகருக்கும் நடுவில் அமைந்துள்ள டார்ணா வெறும் எண்பதாயிரம் மக்கட்தொகையைக் கொண்டது. அந்த ஊரைச் சேர்ந்த 52 பேரது விபரங்கள் அந்த ஆவணத்தில் காணப்படுகின்றன. இன்று கிளர்ச்சிக் குழுக்களின் “சுதந்திர லிபியாவின் தலைநகரமான” பெங்காசியில் இருந்து 21 போராளிகள் சென்றுள்ளனர். ( West Point Military அகாடமி வெளியிட்ட அறிக்கையின் PDF கோப்பு இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது)
மேற்கத்திய தலையீட்டையும், நேட்டோ படைகளினால் லிபியா விடுதலை விடுதலை செய்யப் படுவதையும் கிளர்ச்சியாளர்கள் எதிர்த்ததில் வியப்பில்லை. கடும்போக்கு இஸ்லாமியவாதிகளான அவர்கள், அமெரிக்கர்களை கொல்வதற்காக ஈராக் சென்றவர்கள். தங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் ஆதரவை இழந்து விடும் அச்சம் காரணமாக மறுத்து விட்டார்கள். இருப்பினும் மக்கள் எழுச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே, எகிப்திய இராணுவ அரசு ஆயுதங்களை அனுப்பி வைத்தது. (Egypt Said to Arm Libya Rebels, Wall Street Journal, March 17, 2011″) கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் அனுப்பி உதவுமாறு, ஒபாமா சவூதி அரேபியாவை கேட்டுக் கொண்டார். (“America’s secret plan to arm Libya’s rebels,” Independent, Mach 7, 2011 )
லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக Libyan Islamic Fighting Group (LIFG) என்ற தலைமறைவு அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. 2007 ம் ஆண்டு, ஈராக்கில் அல்கைதா தொடர்பின் பின்னர் அது தனது பெயரை Al Qaeda in the Islamic Maghreb (AQIM) என்று மாற்றிக் கொண்டது.
Libyan rebel commander admits his fighters have al-Qaeda links

விசேட அறிக்கை: மேற்குலகம் ஆதரிக்கும் லிபிய அல்கைதா

கடாபி ஹீரோவா அல்லது நீரோவா!

எஸ்.எம்.எம்.பஷீர்
“நானே மக்கள்,! , கதிரவன் எனது கைச்சட்டைக்குள் ஒரு ரோஜா, நாளின் தீக்குதிரைகள் எனது குருதியில் பாய்ந்து செல்ல, எனது பிள்ளைகள் அடக்குமுறையாளனை தோல்வியுறச் செய்வர் எனது வழியை யார் தடுக்க முடியும்” ( அஹ்மத் புவார்ட் நிம் )- எகித்திய மக்கள் எழுச்சியின் போது பாடிய அஹ்மத் புவார்ட் நிம் எனும் வயோதிப கவிஞனின் பாடலில் ஒரு பகுதி
ரோம சக்கரவர்த்தி நீரோ ரோமாபுரி பற்றி எரியும் போது வீணை வாசித்தான் என்று சொல்லப்படுகிறது. (அதற்கும் இப்போது வரலாற்றாளர்கள் மறுப்பு வெளியிட்டாலும் அந்த வசையுடன் நீரோ இன்னமும் அறியப்படுகிறான் என்பதால் அந்த தலைப்பும் கடாபிக்கு பொருத்தமாக அமையப்போகிறதா என்ற கேள்வியுடன் இக்கட்டுரையும் எழுதப்படுகிறது. அண்மைக்கால கடாபியின் ஏகாதிபத்தியத்துடனான சமரசங்களையும் புரட்டி பார்த்துக்கொண்டே இன்றைய நிலை பற்றியும் அலச வேண்டியுள்ளது விரிவாக
ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பாவும் லிபியா மீது விதித்திருந்த பொருளாதார தடையை 2004 நீக்கி லிபியாவுடன் செய்து கொண்ட பேரம் பேசலில் அங்கு பிரித்தானியாவின் வர்த்தக நலனை மேம்படுத்தும் வகையில் சுமார் 150 கொம்பனிகள் காலூன்ற வழி செய்யப்பட்டது. லிபியாவின் பரந்துபட்ட எண்ணெய் வளங்களை சுரண்ட பிரபல பிரித்தானிய என்னை கொம்பனிகள் அது சார்ந்த தொழில் துறை கொம்பனிகள் அங்கு செயற்பட கடாபி வழிசமைத்தார். அதன் தொடர்சியாக மீண்டும் 2007லில் டோனி பிளையார் வீ .பீ (B.P) எனும் பிரபல எண்ணெய் கம்பனியின் எண்ணெய் அகழ்வுக்கான மில்லியன் 560 பவுண்ட்ஸ் ஒப்பந்தமொன்றையும் கூட்டு முயற்சியில் ஈடுபடும் வகையில் கைசாத்திட பேரம் பேசி அமுல்படுத்தினார்.
ஆபிரிக்காவிலே அதிகூடிய எண்ணெய் வாயு உள்ளதாக அறியப்பட்ட லிபியாவில் ஷெல் கம்பனி உட்பட மேலைத்தேய கம்பனிகள் கடாபியுடன் சுமுகமான உறவை பேணும் ஆலோசனையை தத்தமது அரசுகளுக்கும் வழங்கியுள்ளன. மறுபுறம் பொருளாதாரத்தடையை நீக்கியதுடன் லிபியாவுக்கான பிரித்தானிய ஏற்றுமதி 930 மில்லியன் பவுண்ஸ்களை எட்டியது. மேலும் லிபியாவில் இரண்டு முதலீட்டு ஒப்பந்தங்களை இத்தாலி கூட செய்து கொண்டது. இந்த பின்னணியில்தான் லோகேர்பீ விமான குண்டு வெடிப்பு சம்பந்தமாக குற்றவாளியாக காணப்பட்ட அப்துல்பசெட்பல்-மேகராஹி செப்டம்பர் ல் விடுதலை செய்யப்பட்டார்.
இலண்டனிலிருந்து தற்போது துபாய்க்கு சென்றிருககும் சுமார் எண்பத்து நான்கு வயதான லிபிய பிரதம மந்திரி முஸ்தபா அஹ்மத் பென்-ஹலீம் சுகவீனமுற்றிருப்பதுடன் தனது வயது சுகவீனம் காரணமாக கேட்புலனும் பாதிக்கப்பட்டிருப்பதால் பரஸ்பரம் இருவரும் தொலைபேசியில் நேர்கண்டாலும் விளங்கி கொள்வது கடினம் என அவரின் துபாயிலுள்ள மகன் அவரின் லண்டனிலுள்ள உதவியாளருக்கு என்னிடம் சொல்ல சொல்லியுள்ளார் , அது தவிர அவர் முன்னாள் லிபிய அரசர் இத்ரீசின் ஆதரவாளர் என்பதை அறிந்து கொள்ள முடிந்ததது. மேலும் இங்கிலாந்தில் தனது அரசியல் அனுபவங்களையும் லிபியாவின் எண்ணெய் வளம் ஏற்படுத்திய மாற்றங்கள பற்றியும் அரச ஆட்சி , அரசுக்கெதிரான சதி என்பன பற்றியும் மட்டுமல்ல அண்டை நாடுகள தொடர்பில் லிபியா வகத்த பங்கு என பதின்மூன்று அத்தியாயங்களில் சரித்திரத்தின் நியாய சபையில் எனது சாட்சியம் என்ற முடிவுரையுடன் லிபியா: நம்பிக்கை ஆண்டுகள் ( The Years of Hope) என்ற பெயரில் ஆங்கில அரபு மொழிகளில் நூலாக வெளியிட்டுள்ளார்.
அந்நூலே சுதந்திர லிபியா தொடக்கம் ஆரம்பகால கடாபியின் லிபியாவரையான காலப்பகுதியை அரச ஆதரவாளரான கடாபி எதிர்ப்பாளரான ஒரு லிபிய ஆரசியல்வாதியின் வாக்கு மூலமாக மட்டுமல்ல லிபியா பற்றிய அரசியல் தேடுதலுக்கு துணை செய்கின்றதாக அந்நூல் அமைகின்றது. எவ்வாறெனினும் மேலைத்தேய நாடுகளுக்கு சவால் விட்ட கடாபியினை தமக்கு ஆதரவாளாராக மாற்றி கவிழ்ப்பதில் தீவிரமாக முனைந்திருக்கும் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் ஒரு இறைமையுள்ள நாட்டை இராக்கையும் ஆப்காநிஸ்தானையும் ஆக்கிரமித்து சின்னா பின்னப்படுத்தியதுபோல் லிபியாவையும் செய்ய முஸ்தீபுகளை கடாபியின் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை , அடக்குமுறைகளை சாட்டாக கொண்டு உட்புகும் நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறார்கள்.
மக்கள் புரட்சி எப்போதுமே இரத்தம் சிந்தியே வெற்றி பெற்றுள்ளது என்பதை மறுதலிக்கும் வகையில் எண்பதுகளின் பிற்பகுதியில் போலாந்து (1989) ஹங்கேரி (1989) ஆகிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் குத்துக்கரண மாற்றங்கள் அடக்குமுறை ஆட்சியாளர்கள் அமைதியாக ஜனநாயக ஆட்சி முறைக்கும் வந்து தம்மையும் காப்பாற்றி கொணடனர் , ரொமேனியா சர்வாதிகாரி மட்டும் சசெஸ்கூ மக்களைக் கெதிராக சவால் வீடு அடக்க முற்பட்டு தூக்கில் உயிரிழக்க வேண்டி நேரிட்டது. (1989) கிழக்கு ஐரோப்பாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சோவியத் தொடக்கிவைத்த மாற்றங்களுடன் இறுதியில் சோவியத்தும் அமைதியான மாற்றத்துக்கு உள்ளானது (1991). அதே ஆண்டில்தான் (1989) தினமன் சதுக்கத்தில் (Tiananmen Square) மாணவர் புரட்சியும் வன்முறை பிரயோக்கி பட்டு சீன அரசால் அடக்கப்பட்டது. பர்மாவிலும் சுதந்திர ஆர்ப்பாட்டம் அதற்கு முன்னைய வருடத்தில் (1988) அடக்கி ஒடுக்கப்பட்டது.
இந்த புரட்சிகள் நடைபெற்று இரு தசாப்தங்களின் பின்பு மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்கா அரபு நாடுகளில் இப்போது அடுத்தடுத்து நடைபெறும் மக்கள் போராட்டங்களும் கிழக்கு ஐரோப்பாவில் அமைதியாகவும் ஆர்ப்பாட்டமாகவும் நடந்து முடிந்த மக்கள் புரட்சிகளை நினைவு கூறச் செய்கின்றன. மீண்டும் லிபியாவுக்குள் மட்டுமல்ல இன்று பொருளாதாரப் பலத்தை கொண்டுள்ள அரபு நாடுகளின் அரசியல் பலத்தை கட்டுப்படுத்த வேண்டிய மூல உபாயங்களை தீவிரமாக வகுத்துக் கொண்டிருக்கும் ஒருபுறம் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் தமது நலன் சார்ந்த ஆட்சி மாற்றத்தையும் பற்றி தீவிரமாக அக்கற்றை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஏகாதிபத்தியங்களின் பகைவர்களாவிருந்து இன்று அவர்களின் நண்பர்களாக மாறியவர்களை அவ வேகாதிபத்தியங்களே பழிதீர்த்து கொள்வதை அல்லது பலி தீர்க்கப்படுவதை ஆதரித்து செயற்படுவதை அண்மைய உதாரணமாக இராக்கிலிருந்து தொடர்ந்து செல்லும் பயணத்தில் இப்போது லிபியாவில் வந்து நிற்கிறது. பஹ்ரைனில் மனித உரிமைக்காக பஹ்ரைன் அரசுக் கெதிராக தொன்னூறுகளின் முற்பகுதியில் குரல் கொடுத்த முக்கிய பிரித்தானியர் டேவிட் கிளாட்ஸ்டோன் (David Gladstone) .
இவர் பிரித்தானிய அரசு தமது சுய பொருளாதார நலனுக்காகாக பஹ்ரைனை கண்டும் காணாமல் இருக்கிறது என்று குற்றமும் சாடியவர் . அதற்கும் மேலாக இவர் இங்கையின் பிரித்தானிய தூதுவராக இருந்த போது தேர்தல் சாவடிகளுக்கு சென்று தேர்தல் முறைகேடுகள் பற்றி கருத்துரைத்தவர் என்பதற்காக அங்கிருந்து -தூ துவராக இருப்பதிலிருந்து – நீங்கி (persona non grata) செல்ல வேண்டி நேரிட்டவர். எவ்வாறாயினும் தமது காலனித்துவ மனப்பதிவுடன் உள்நாட்டு விவகாரங்களில் ஏகாதிபத்தியங்கள் தலையிடுவ தென்பதும் , அவாறான தலையீடுகளுக்கு அந்நாட்டு பிரஜைகளை உள்நாட்டில் தகுந்த சன்மானம் வழங்கி கைகூலிகளாக வைத்திருப்பதும் அல்லது அவ்வாரானவர்களுக்கு தமது நாட்டில் அகதி அந்தஸ்து வழங்கி தமது நாட்டு சமூகத்தில் உள்ளீட்டம் (Assimilation) செய்வதுமாக பல் படித்தரமான நடவடிக்கைகள் ஊடாக தமது அரசியல் மூலோபாய இலக்குகளை அடைந்து கொள்வதும் மேற்குலகின் தந்திரமாக இருந்து வருகிறது.
இதற்கான சூழலையும் துரதிஷ்டவசமாக சுதேசிய நாடுகளின் தலைவர்களின் ஜனநாயக மறுப்பு எதோச்சதிகாரம் மனித உரிமை மீறல் என்பன ஏற்படுத்திவருகின்றன. அந்த பின்னணிகளையும் கருத்தில் கொண்டு இன்றைய அரபுலக போராட்டங்கள் தமது இலக்குகளை அடைய வேண்டும் என்பதுவே மிக முக்கியமானதாகும் லிபியா மீது பல்வேறு சர்வதேச அழுத்தங்களை பிரயோகித்து அங்கு உள் நுழைய முற்படும் அமெரிக்க ஐரோப்பிய இராணுவ உட்புகுதலை -உதவியை- அம்மக்களும் விரும்பவில்லை என்பதை மிக தெளிவாக சொல்லியுள்ளார்கள். என்றாலும் கடாபி , அதற்கு வழி சமைப்பாரா என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.
தின்னமன் சதுக்கத்தில் சீன பலகலை கழக மாணவர் முன்னின்ற கிளர்ச்சி பற்றிய பின்னணிகள் பற்றிய பல செய்திகள் அனுமானங்கள் சென்ற வருடம் அவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட லியு சியாபூ என்ற சீனருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு இதனை நிரூபிக்கும் அண்மைய நிகழ்வாகும். எவ்வாறெனினும் இன்று சீனா உலகின் இரண்டாவது பொருளாதரா சக்தியாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் நபுஞ்சக தனத்தை இறைமையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் , அதற்காக எந்த எளிய செயலையும் செய்யும் ஒரு கேவலமான சம்பவமாக உலகின் கேவலமான ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கும் அமரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்த தொலைபேசி சுவிட்சுகள் சீன உத்தியோகத்தர்களின் உரைடாடல்களை இலகுவில் ஒட்டுக் கேட்கும் வகையில் இருந்ததையும் , சீன அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த விமானங்கள் சீனாவின் ஆகாயப்படை ஒன்று விமானங்களின் பதிப்பு விமானங்களில் நவீன ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தப் பட்டிருந்ததையும் சீன கண்டு பிடித்தது என்பதும் அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை காட்டுகிறது. ஆகவே போராட்டங்கள் மக்கள் போராட்டமாக பரந்து பட்ட ரீதியில் வீரியம் கொள்ளும் போது தமது ஆபத்பாந்தவனாக அமெரிக்காவையோ அல்லது ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளையோ மக்கள் நாடினால் அல்லது அவர்களின் கைகூலிகளை தலைவர்கள் ஆக்கினால் விளைவுகள் என்னவாகவிருக்கும் என்பதையும் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்.
ஆப்கானிஸ்தானில் மக்களை சுட்டுக் கொல்வது வேடிக்கையானது என்றும் தனது படையணியினருக்கு அவ்வாறு கட்டளையிட்டதுடன் இராக்கினை ஆக்கிரமித்த பின்னர் “தன்னுடன் முரண்பட்டால் உங்கள் எல்லோரையும் சுட்டுதள்ளுவேன்” என்று இராக்கிய சுதேசிய மக்களை விரட்டிய ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸ் ( General James Mattis ) ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதப்படைகளின் மத்திய ஆணையின் உயர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டதையும் நான் அமெரிக்காவின் அண்மைக்கால மனித உரிமை அரசியல் கபடத்தனத்துக்கு உதாரணங்களாக கொள்ளலாம். இப்போதெல்லாம் பல விகிலீக்ஸ் தகவல் பரிமாற்றங்கள் வெளிவந்து ஏகாதிபத்திய நாடுகளின் அவர்களின் ஆதரவு நாடுகளின் முகத்திரையை சற்று நீக்கத் தொடங்கியிருக்கிறது. இன்றைய உலகின் முதிர்ந்த அரசியல் ஞானியும் இடதுசாரி கருத்தியலாளரும் பாலஸ்தீன மக்களின் நியாயபூர்வ உரிமைகள் தொடர்பிலும் இராக்கிய மக்களின் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் , தான் சார்ந்த சமூகமான யூதர்களின் சியோனிஸ கருத்தியல்கள் குறித்தும காரசாரமான விமர்ஷனங்களை முன்வைத்து இஸ்ரேல நாட்டு இஸ்தாபிதத்தையும் கேள்விக்குட்படுத்திய அறிஞர் எரிக் ஹோப்ச்வாம் ( Eric Hobsbawm) அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளை தலையீடுகளை ” மனித உரிமைகள் ஏகாதிபத்தியம் ” (Imperialism of human rights ) என்று கூட சொல்லலாம் என்று குறிப்பிடுகிறார். இப்போது லிபியாவில் தனது மனித உரிமை ஏகாதிபத்தியத்திற்கான தலையீட்டை கடாபி ஏற்படுத்தி கொடுப்பாரா அல்லது அமைதியாக வெளியேறிவிடுவாரா அல்லது தமது எதிர்ப்புக்களை அடக்கி வெல்வாரா !! . பதிலும் வெகு தூரத்திலில்லை.
கடாபியின் லிபியாவிற்கும் இலங்கை மற்றும் மூன்றாம் உலக நாடுகள் நெல்சன் மண்டேலாவின் தென் ஆபிரிக்காவிற்குமான தொடர்புகள் குஜன ஊடக செய்திகள் ஆனால் இலங்கையின் ஆட்சியுடனான அரசியல் தொடர்புகளுக்கு அப்பால் இஸ்லாமிய சோசியலிச முன்னணி எனும் கட்சியை தோற்றுவித்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதயுதீன் கடாபியுடன் நேரடியாக தொடர்புகொள்ள வாய்ப்பு கிடைத்தவர் என்பதுடன் கடாபியும் இஸ்லாமிய சோசலிசம் -பொதுவுடைமை- கொள்கையை தனது பச்சை நூல் மூலம் பரப்பியவர். அவரின் மத வியாக்கியானங்கள் தான் சர்ச்சைக்குரியனவாக அமைந்தன. அதேவேளை எழுபதுகளில் கடாபியின் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பு , மூன்றாம் உலக கட்டுமான செயற்பாடுகள் காரணமாக இடதுசாரி சக்திகளும் இவரை ஆராதித்தன. அந்த வகையில் கமுனிஸ்ட் கார்த்திகேசு ஆசிரியர் . வீ. பொன்னம்பலம் போன்ற தமிழ் இடதுசாரிகளும் இவரை பற்றி சிலாகித்து பேசியுள்ளனர். உலக இஸ்லாமிய அழைப்பு சமூகம் என்று கடாபி லிபியாவில் உருவாக்கிய ஒரு நிறுவனம் எவ்வாறு இலங்கையில் செயற்பட்டது. மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஸ்ரப் , இன்றைய தலைவர் ஹக்கீம் ஆகியோரின் தொடர்புகளுடன் உள்ள சம்பவங்களுடன் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை….sbazeer@yahoo.co.uk

கடாபி ஹீரோவா அல்லது நீரோவா

dinsdag 29 maart 2011

தமிழர்களை அழிக்க துணைபோன காங்கிரஸிற்கு வாக்களிக்காதீர்! கவிஞர் தாமரை வேண்டுகோள்

 
[ செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011, 12:57.13 AM GMT ]
இலங்கையில் எமது ஈழத் தமிழினத்தை கொன்றழிக்க இராஜபக்சேவுக்கு துணைபோன காங்கிரஸ் கட்சிக்கு தமிழக தமிழர்கள் வாக்களிக்கவேண்டாம் என தமிழக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கவிஞர் தாமரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:

லிபியா சர்வாதிகாரியும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களும்

மக்கள் தமக்காக தாம் போராடாத வரை, மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் மறுபடியும் புதிய அடக்குமுறையாளர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை வழங்குகின்றது. எகிப்திலும் துனிசியாவிலும் தன்னெழுச்சியாக நடந்த மக்கள் எழுச்சியும் கிளர்ச்சியும், ஆட்சி மாற்றத்தை உருவாக்கியதே ஒழிய அந்த மக்களை விடுவிக்கவில்லை. மீண்டும் அதே அரசு இயந்திரம் தான், அதற்கு தலைமைதாங்கிய சில பொம்மைகள் தான் மாறியது.
இதுபோல் லிபியாவில் அமையவில்லை. மாறாக வன்முறை, சிவில் யுத்தம், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு ஊடாக, ஒரு இரத்தக் களரியை அது எதிர்கொண்டுள்ளது. பல ஆயிரம் லிபியா மக்களின் உயிரை பலிகொள்ளும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாக மாறியுள்ளது.
லிபியாவில் கடாபி குடும்பம் நடத்தும் சர்வாதிகாரம், நாட்டை கொள்ளையிட்டும், மக்களை ஒடுக்கியும் தான் ஆண்டது. கொள்ளையிட்ட பணத்தை மேற்கத்தைய நாடுகளில் முதலிட்டும், லிபியா எண்ணை வயல்களை மேற்கத்தைய பன்னாட்டு எண்ணைக் கம்பனிகளிடம் தாரை வார்த்தபடி தான், தொடர்ந்து தானும் லிபியா கொள்ளையிட்டது. மக்களைச் சுரண்டியும், ஓடுக்கியும் மேற்கு சேவை செய்த அதேநேரம், தன்னை தக்கவைக்க அரபுலக மக்களினதும் இஸ்லாமிய மக்களினதும் பாதுகாவலனாக தன்னை கட்டிக் கொள்ள முனைந்தது.
இரத்தம் சிந்தாப் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த கடாபி, தன்னை அரபுலகின் மீட்சியாளனாக காட்டிக்கொள்ள முனைந்தார். எண்ணை வயல்களை தேசியமயமாக்கி, ஏகாதிபத்திய மூலதன நலனின் கையை வைத்தார். இப்படி மேற்கு மூலதனத்துடன் தொடங்கிய முரண்பாடு, அரபுலகின் பேட்டை ரவுடியான இஸ்ரேலுடனான முரண்பாடு, லிபியாவுக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகள் கூர்மையாகியது. கடாபி தன்னை அரபுலகின் மீட்பாளராக காட்ட, மேற்குடன் முட்டி மோதிய சில நடவடிக்கைகளை காட்டி ஏகாதிபத்தியம் தன் சதி வலையை இறுக்கியது. இதன் மூலம் பொருளாதார தடை முதல், அமெரிக்கா கடாபியைக் கொல்ல விமானம் மூலம் குண்டு வீசியது வரை, பல தொடர் நிகழ்வுகள் கடாபி ஆட்சிக்கு எதிராக கடந்த காலத்தில் ஏகாதிபத்தியம் அரங்கேற்றியது.
இதன் பின்னணியில் கடாபிக்கும் ஏகாதிபத்தியக்கும் இடையில் நடந்த பேரங்களைத் தொடர்ந்து, கடாபி ஏகாதிபத்திய நலனுக்கு ஏற்ற நல்ல பிள்ளையானார். கடாபியால் விமானமொன்றுக்கு குண்டு வைத்ததாக கூறிய நிகழ்வுக்கு பல நூறு கோடி டொலரை லிபியா வழங்கியும், தன் எண்ணை வயல்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்ததன் மூலம், ஏகாதிபதிய கொள்ளைக்கு ஏற்ற நல்ல லிபியாவாக மாறியது.
இதைத் தொடர்ந்து அரபுலகுக்கு ஏற்ற இஸ்லாமிய மக்களுக்கு ஏற்ற லிபியா என்ற கடந்தகால விம்ப அரசியல் மூலம், தொடர்ந்து தன்னை தக்கவைக்க கடாபியால் முடியவில்லை. அடக்குமுறை மூலம் மட்டும்தான் ஆளுகின்ற நிலை உருவானது. மேற்கு மூலதனம் லிபிய எண்ணையை நேரடியாக சுரண்டியதால், முன்பு இந்த மக்களுக்கு கிடைத்த எலும்புகளையும் கூட மக்கள் இழந்தனர். கடாபி குடும்பம் தன் பங்குக்கு கொள்ளையிட்ட சொத்தை மேற்கில் குவிக்கத் தொடங்கியதால், மேற்கு கொள்ளையிட்டது போக எஞ்சிய எலும்புகளையும் மக்கள் இழந்தனர். இதனால் அதிருப்த்தியும், எதிர்ப்பும் அதிகரித்தது. இதனால் அடக்குமுறையும் ஓடுக்குமுறையும், மக்களை தனக்குள் முடக்கி தன்னெழுச்சியான கிளர்ச்சிக்குள் வைத்திருந்தது.
இதில் இருந்து மீள அரபுலக மக்களினதும் இஸ்லாமிய மக்களினதும் பாதுகாவலனாக தொடர்ந்து காட்டிக்கொண்டு தன் ஆட்சியை தக்கவைக்கும் புதிய உத்தி, மேற்குடனான முரண்பாடுகளை உருவாக்கி வந்தது. மேற்கு மூலதனம் சுரண்டுவதில் ஒரு பகுதியை, இந்த சர்வாதிகாரர்களால் அபகரிக்கப்படுவதை மேற்கு மூலதனம் விரும்பவில்லை. அனைத்தையும் தான் அனுபவிக்க விரும்பியது. மக்களுடனான கடாபியின் முரண்பாடு, கூர்மையாகி வந்தது. இதனால் கடாபியின் தலைமையில் தொடர்ந்து மேற்கு மூலதனம் அமைதியாக லிபியாவில் சுரண்டமுடியாது என்று கண்ட நிலையில்தான், கடாபியை மாற்றிவிட ஏகாதிபத்தியம் இன்று தலையிடுகின்றது.

பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் முன்முயற்சியும் அதன் பாத்திரமும்
பிரஞ்சு அரசும், ஜனாதிபதியும் உள்நாட்டில் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடியில் இருந்து மீளவும், மக்களை திசை திருப்பவும் இந்த ஆக்கிரமிப்புக்கு குரல் கொடுத்து அதற்கு தலைமை தாங்குகின்றது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இன்றைய பிரஞ்சு ஜனாதிபதி இரண்டாவது சுற்றுக்கு தேர்வாக மாட்டார் என்ற கணிப்பீடுகளில் இருந்து மீளவும், இந்த ஆக்கிரமிப்பு தமக்கு உதவும் என்று கருதுகின்றனர். இந்த அரசு, ஊழலில் சிக்கியுள்ளதுடன், துனிசியா மக்களின் கிளர்ச்சியை ஒடுக்க இந்த அரசுடன் இருந்த வெளிவிவகார அமைச்சர் முற்பட்டது அம்பலமாகியது. துனிசியா சர்வாதிகாரர்களின் செலவில் உல்லாசமாக இருந்தது உட்பட, இந்த சர்வாதிகாரியை இறுதிவரை பாதுகாக்க முனைந்தது அம்பலமானது. இதையடுத்து ராஜினாமா செய்ய மறுத்த நிலையில், எதிர்ப்புகள் அதிகரிக்க புதிய மந்திரி சபையை மாற்றினர்.
இப்படி அரசியல் பித்தலாட்டம் மூலம் தெரிவான இன்றைய புதிய வெளிவிவகார அமைச்சர் அலன்யூப்பே. இவர் மக்கள் பணத்தை கையாடியதற்காக குற்றவாளியாக கண்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். இப்படி குற்றவாளிகள் தான், லிபியா மீதான ஆக்கிரமிப்பு குற்றத்தை தங்கள் சொந்த உள்நாட்டு அரசியல் வங்குரோத்தை ஈடுகட்ட தொடங்கியுள்ளனர்.
மக்களை பாதுகாக்க என்று கூறிக்கொண்டு, அமெரிக்காவுடன் சேர்ந்து நடத்துகின்ற ஒரு ஆக்கிரமிப்பாகும்; இது. இலங்கையில் 50000 மக்கள் கொல்லப்பட்ட போது, இந்தியாவின் நலனுடன் சேர்ந்து நின்ற இந்தக் கொலைகார ஏகாதிபத்திய உலகம்தான், லிபியாவில் மக்களைச் சொல்லி ஆட்டம் போடத்தொடங்கியுள்ளது. இது போல் ஈராக்கில் தலையிட்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம், சதாமுக்கு பிந்தைய தங்கள் ஆக்கிரமிப்பு ஆட்சியில் பல இலட்சம் மக்களை கொன்று குவித்ததுடன், அதை இன்று வரை தொடருகின்றது.
இங்கு மக்களைப் பாதுகாத்தல் என்பது, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு விரிக்கும் கம்பளம் தான். உலகளவில் மக்களைக் கொன்று குவித்த, குவிக்கின்ற ஆட்சியாளர்களின் பாதுகாவலராக திகழும் இந்த ஏகாதிபத்தியங்கள் தான், தாங்கள் ஆக்கிரமித்த மண்ணில் பல இலட்சம் மக்களைக் கொன்று குவித்தவர்கள். இப்படி கடந்த காலம் முதல் இன்று வரையான காலனிய மற்றும் ஏகாதிபத்திய வரலாறு எங்கும், பல இலட்சம் மக்களை கொன்று குவித்தவர்கள், குவித்து வருபவர்கள் மக்கள் வே~ம் போடுகின்றனர்.
லிபிய மக்களைப் பாதுகாக்க என்று கூறி, பல ஆயிரம் லிபிய மக்களைக் கொன்று தான், ஏகாதிபத்திய விருப்பங்கள் லிபியாவின் "சுதந்திரமாக" பிரகடனம் செய்யப்படும். இதுதான் ஏகாதிபத்திய வரலாறு. ஏகாதிபத்திய தேர்வுகள் லிபிய மக்களின் தேர்வல்ல, ஏகாதிபத்தியங்கள் பாதுகாக்கும் மூலதனத்தின் சொந்தத் தெரிவாகும். இது லிபிய மக்களின் அடிமைத்தனங்கள் மேலான "சுதந்திரம்". இதைத் தாண்டியதல்ல மூலதனத்தின் உலக ஒழுங்குக்கு உட்பட்ட "ஜனநாயகம்".

பி.இரயாகரன்
20.03.2011

donderdag 24 maart 2011

ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப் பேரலையும் ஜப்பானிய மக்களுக்குப் பெரும் அவலத்தைக் கொடுத்துள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் எதிர்கொண்ட மிகப் பெரும் நெருக்கடி இது என ஜப்பானியப் பிரதமர் நஓற்றா கான் தெரிவித்ததிலிருந்து அழிவுகளின் அவலத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஜப்பானிய மக்களின் துயரத்தில் நாமும் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் வழங்க வேண்டியது ஒவ்வொரு மனிதரதும் கடமையாகவே உள்ளது. ஈழத் தமிழர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி ஜப்பானிய மக்களது நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்வது அவசியம்.

ஆயினும், தமிழீழ மக்களது அழிவுகளிலும், அவலங்களிலும் ஜப்பான் வகித்த பாத்திரத்தை நாம் மறந்துவிட முடியாதவர்களாகவும் உள்ளோம். இறுதி யுத்த கால அழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஜப்பானுக்கும் இருந்தது. ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்ற வேதனை ஒவ்வொரு ஈழத் தமிழனது நினைவையும் விட்டகல மறுக்கின்றது. ஆழிப் பெரும் துயரின்போது ஆதரவு வழங்கிய ஜப்பான், இறுதிப் போரின் காலத்தில் மௌனமாக இருந்து ஒரு இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தத் தவறியது என்பதை யாரும் மறுத்துக் கூற முடியாது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கும், அடக்கப்பட்ட தமிழர்களுக்கும் இது ஆண்டவன் வழங்கிய தண்டனை என்ற திருப்தியை வழங்கியிருக்கக் கூடும். இப்போது ஜப்பான் என்றால், எப்போது இந்தியா? என்ற எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு வழங்கியிருக்கும்.

சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, பெரும் கொடையாளி நாடாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிர்ச்சிகரமானது. சிங்கள தேசத்திற்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிதிகள் இன்னமும் சில காலத்திற்கு ஜப்பானால் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதால், ஜப்பானின் பேரழிவு சிங்கள அரசுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று நம்பலாம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, உள்ளுர் விளை பொருட்களும் அழிவுக்குள்ளான நிலையில், ஜப்பானின் நிதி உதவிக்கும் வந்து சேர்ந்துள்ள ஆபத்து, சிங்கள தேசத்தை ஆட்டிப் படைக்கப் போகின்றது.

சிங்கள தேசத்தின் பொருளாதாரத் தாழ்வு நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும் சீனாவும் இன்னமும் ஊன்றிக் கால்பதிக்கும் நில உருவாகும். அது, அழிவுகளுக்குள் வாழ எத்தனிக்கும் தமிழர்களை விடவும், சிங்கள மக்களுக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் நிறைந்த கள நிலையை உருவாக்கப் போகின்றது. எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகக் கையாள்வதன் மூலம் தமிழீழம் நோக்கிய பாதையை விரைவு படுத்தலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெறும் அறிக்கைப் போரை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களை குழுக்களாக்கி உடைக்கும் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு, அனைத்துத் தமிழர்களுக்குமான ஜனநாயக அமைப்பாக, புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைப்பதில்தான் தமிழீழ மக்களின் அடுத்த கட்ட வெற்றி தங்கியுள்ளது.

- கரிகாலன்
22 Mar 2011
 
 நொந்துபோயிருக்கையில் பழைய பிழைகளை சுட்டிக்காட்டுதல் அழகல்ல!!அதுவும் தமிழன் அப்படி செய்வது "வெந்த புண்ணில் வேலைப்பாச்சுதல்"என்ற பழமொழி சொன்ன முன்னோருக்கு செய்யும் துரோகம்!!

dinsdag 22 maart 2011

அமெரிக்கா காப்பாற்றும் என நம்பிய நடேசன்! சிரேஷ்ட ஊடகவியலாளர் வெளியிடும் அதிரடித் தகவல்கள்

இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் கடைசிக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் உறுதியளித்திருந்ததாக அமெரிக்காவில் நிலைகொண்டிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

அவர் இது பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் குறிப்பிட்டதாகவும், நடேசன் இது தொடர்பாக தன்னுடன் ஆலோசனை நடத்தியதாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு தான் நடேசனை அறிவுறுத்தியதாகவும் அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி தனது பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கப்படும் பட்சத்தில் எந்த ஒரு சர்வதேச விசாரணையிலும் இது குறித்து சத்தியக்கடதாசி ஒன்றை சமர்ப்பிக்கவும் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2007 முதல் 2009 வரையான காலப்பகுதியில் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தில் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்குப் பொறுப்பான பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட்டின் சிந்தனையாளர் வட்டத்தில் இணைந்து பணியாற்றியவரே இந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்றும் நடேசன் தன்னிடம் கூறியதாக இந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜோன் லீ என்டர்ஸன் என்பவர் பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட்டை இலங்கையின் நெருங்கிய நண்பர் என்று அண்மையில் நிஙுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார். மே மாதம் 16ம் திகதி நோர்வேயில் உள்ள ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரோடு நடேசன் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த வெளியேற்றத் திட்டம் பற்றி அவரிடம் விசாரித்துள்ளார். தங்களைக் காப்பாற்ற கப்பல் ஏதும் வருகின்றதா என்றும் வினவியுள்ளார்.

பதிலுக்கு அந்த நோர்வே பேராசிரியர் இலங்கை நேரப்படி நள்ளிரவில் கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார். இத்தகைய ஏற்பாடுகள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இவருக்கு கொழும்பிலுள்ள பதில் தூதுவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இது பற்றி நோர்வே தூதுவரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் அது குறித்து கொழும்பில் இருந்த அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்கை தொடர்பு கொண்டுள்ளார். அதன் பிறகே இவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

நடேசனால் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள்தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

அரசியல் கட்சியொன்றை தொடங்குவது சம்பந்தமாக இவர் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களுடன் கலந்துரையாடியுள்ளார், என்று கொழும்பு வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது
21 Mar 2011

woensdag 16 maart 2011

பிரான்ஸில் இலங்கை தமிழர்கள் அதிகமாக வாழும் பரிஸ் புறநகரப்பகுதியான லாகூர்நோவில் தமிழ் குழுக்களுக்கிடையில் மோதலில்

(வீடியோ இணைப்பு)

எங்கு சென்றாலும் இவர்கள் திருந்தப்போவதுமில்லை,
ஒன்றுபடப்போவதுமில்லை,இவர்களிடம் நாட்டை கொடுத்தால் தமிழனின் கதி!!

vrijdag 4 maart 2011

அதிசய புலிக் குழந்தை! (காணொளி, பட இணைப்பு)

இன்று உலகில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விடயங்களே நடைபெறுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கஷ்டபிரதேசமான கிலிஜிட்டில் 2010 ஆம் ஆண்டு பிறந்துள்ள இக்குழந்தையானது புலியினுடைய முகத்தோற்றத்தை கொண்டமைந்துள்ளது.

மற்றும் இந்த குழந்தையின் உடம்பில் சிவப்பு வரிகளும் காணப்படுகின்றன. மரபணுவில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு பிறந்துள்ளது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Harlequin-type Ichthyosis என்ற மிகவும் அரிதான தோல் நோயே இந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது என குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.