தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 januari 2013

த.தே.கூட்டமைப்பினரை முதலில் சந்தித்த அமெரிக்க உயர்மட்டக் குழுவினர்


இலங்கை வந்த அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இன்று நண்பகல் அமெரிக்க தூதராலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கூட்டமைப்புத் தூதுக்குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமை வகித்தார். அமெரிக்காவின் உயர்மட்டக்குழு தனது இலங்கை பயணத்தின்போது முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தான் ஏனையவர்களுடனான சந்திப்பு என்று கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் தூதுக்குழுவில் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் தெற்காசியா மற்றும் பசுபிக் விவகாரங்கள் பிரிவின் மூன்று வெளியுறவு பிரதிச் செயலாளர்கள் அங்கம் வகித்தனர்.
இச்சந்திப்பு தொடர்பாக இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழர்கள் பிரச்சினை பற்றி நாடு சுதந்திரம் பெற்ற நாட்தொடக்கம் இன்று வரை இடம்பெற்று வருகின்ற அநீதிகள், துயரங்கள், அறவழியில் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அன்று நடத்திய போராட்டங்கள், அது பின்னர் ஆயுதப் போராட்டமாக மாற வேண்டிய நிர்ப்பந்தங்கள், முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரும் தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலங்களை பறிகொடுத்து பாரம்பரிய இடங்களில் மீளக்குடியமரமுடியாமல் பாரம்பரிய பிரதேசங்களை பெரும்பான்மை இனத்திடம் பறிகொடுக்கும் நிலையில் எல்லாரும் கைவிட்ட நிலையில் அனாதரவாக வாழ்கின்ற அவல நிலை பற்றியெல்லாம் அமெரிக்கத்தூதுக்குழுவின் முன்னால் ஆதாரபூர்வமாக முன்வைத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

"டெசோ' மாநாட்டுத் தீர்மானங்களை ஐ.நா.வின் 47 உறுப்பு நாடுகளிடம் வழங்க முடிவு!


zaterdag 26 januari 2013

அவலங்களின் அத்தியாயங்கள்- 52


இந்தியப் படையினருக்கு பிரமிப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் - (அவலங்களின் அத்தியாயங்கள்- 52) – நிராஜ் டேவிட்

donderdag 24 januari 2013

புரியல சாமி தமிழன் போகின்ற இடம்??!!

பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவத்திலிருந்து இலங்கையை நீக்குவதற்கான கனடாவின் முயற்சி வெற்றியளிக்குமா?


இணையத்தளங்களுக்குள் ஊடுருவி தரவுகளில் மாற்றம் ஏற்படுத்தும் நபர்கள்!


இலங்கைக்கு இந்தியா அனைத்து வழிகளிலும் உதவி புரியும்!- மன்மோகன் பீரிஸிடம் உறுதி !!


இலங்கையில் மீண்டும் எழுதப்பட்ட தமிழ் சிங்களம் கலந்த தேசியகீதம்! ஜனாதிபதியிடம் கையளிப்பு !!


அலாம் அடிக்கும் ஐ.பி.சி ரேடியோ உரிமையாளர்( ஒலி நாடா வெளியானது )!!!


  

மலேசியாவை அவமதிப்பு செய்த இலங்கை உயர்ஸ்தானிகருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !!


தமிழ் இனி மெல்லச் -----! பூநகரான் !!