அன்றே அறிவாளிகள் "ஜேயாரிடம் தமிழர் கேட்கும் தனி நாட்டை பிரித்து கொடுங்கள்.ஒரு வருடத்தில் அவர்களுக்குள் மோதியழிந்திடுவர்,மீண்டும் இணைத்துக்கொள்ளலாம்" என்றனர்.அவ்வளவுக்கு தமிழர் பற்றிய அறிவு அவர்களுக்கு,1987இல் உதவிக்கு வந்த இந்தியாவை திட்டமிட்டு ஈழத்தமிழர் விரோதியாக்கிய பெருமை அதே ஜேயாரையே சாரும்.தமிழனின் தலைக்கனமே அவன் அழிவுக்கு காரணம்."மூடனும் முதலையும் கொண்டது விடா" என்பதில் தமிழனும் என்று சேர்க்க இன்றைய செயற்பாடுகள் ஆதாரமாகும்.சில நாடுகளில் காணப்படும் ஜனநாயக சலுகைகளை இவர்கள் தங்கள் அறிவீனத்தால் இல்லாமல் செய்து அந்த நாட்டு மக்களுக்கும் அநியாயம் செய்வதுடன் தமிழருக்கும் இழிவையும் தாழ்வையும் கொடுப்பதுடன் தற்பெருமை வேறு அடிக்கிறார்கள்.உலகில் இலங்கை தலைகுனிய ராணுவத்தால் எடுக்கப்பட்டு வீடியோ,புகைப்பட ஆதரங்களே காரணம்.சிங்களம் விட்ட தவறே நமக்கு உலகில் அனுதாபம் வர காரணமே அன்றி புலம் பெயர் தமிழரின் செயற்பாடல்ல.சுயலாபத்துக்காக இவர்கள் பிரிந்தழிவதுடன் கிடைக்கக் கூடிய தீர்வுகளையும் இல்லாமல் செய்ய முனைகின்றனர்.புலிகள் கூறிய "புலிகள் அற்ற தீர்வு சாத்தியப்பட விடமாட்டோம்" என்பதை மூட தமிழ் மக்களின் அறியாத்தனத்தால் நிறைவாக்கப்போகிறார்கள்.இவர்களே தமிழரின் கோடரிக் காம்புகள்,எப்போது தமிழர் இதை புரிவது!!நல்ல காலம் எப்போது பிறப்பது????
முள்ளிவாய்க்காலிலிருந்து முன்நகர ஆரம்பித்துள்ள தமிழீழ விடுதலைத் தேர்!