தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 januari 2012

தற்புகழ்ச்சி!!


இலங்கைக்கு ருத்ரகுமாரன் போட்ட குண்டு! ஓடித் திரியும் இலங்கை அரசு! வென்ற தமிழீழ அரசு!
[ புதன்கிழமை, 04 சனவரி 2012, 09:52.52 AM GMT ]
தென்னாபிரிக்கா, தென்சூடான் தென்னாபிரிக்க காங்கிரஸ், நெல்சன் மண்டேலா மற்றும் அதனை அண்டிய நாடுகள் பலவற்றுடன் நாடு கடந்த தமிழீழ அரசு இணைந்து பணியாற்றி வருவதும் அத்துடன் மேலும் பல நாடுகள் தமது நிலைப்பாட்டினை ஏற்று தமக்கான பரிபூரணமான ஆதரவினை நல்க உள்ளார்கள் என....
..புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இலங்கை இந்தியாவுக்கு நேர்முகமாக தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன் விட்ட எச்சரிக்கையினை அடுத்து தற்போது கொழும்பு மிக வேகமாக செயற்பட ஆரம்பித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை திறந்து தமது நட்புறவை பேணும் நிலையில் இவை முனைந்துள்ளனவாம்.
அதற்காக மகிந்த கோத்தாவின் நேரடி கட்டளையில் சில நாடுகளுடன் புதிய தமது தூதரகங்களை திறந்து தமிழீழ அரசின் தமிழீழ அமைப்புக்கான நகர்வினை தடுக்கும் நோக்குடன் இலங்கை வெளிநாட்டு அமைச்சு தனது பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக கொழும்புடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைவாகவே கடந்த வருடம் சில நாடுகளுடன் இலங்கை தனது தூதரகங்களை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனை மையமாக வைத்தே புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் அமைப்புகளினால் கைது செய்து விடபட்ட புலிகளை இணைத்து புதிய ஆயுத போராட்டம் ஒன்றை நடத்த இவர்கள திட்டமிட்டு வருவதாக இலங்கை அரச புலனாய்வுத்துறை பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பியுள்ளது அம்பலமாகியுள்ளது.
தமிழீழ அரசின் நேர்த்தியான தமிழீழ அமைப்பின் பயணத்திற்கு உலக தமிழினம் வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றது!

Geen opmerkingen:

Een reactie posten