தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 januari 2012

தமிழ் மக்களே காட்டிக்கொடுப்போர் அன்றும் இன்றும் யார் என புரிகின்றதா??


டங்கோ 9 புலிகளின் புலனாய்வு முகாம்: சங்கீதன் குட்டுகள் அம்பலம் !
23 January, 2012 by admin

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு போராளி என்று சொல்லி 2009ம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் லண்டன் வந்த சங்கீதன் என்பவர் தாம் தான் தலைமைச் செயலகம் எனக் கூறி பல குழப்பங்களைத் தோற்றுவித்து இருந்தார் என்பது யாவரும் அறிந்த விடையம். மாவீரர் தின நிகழ்வுகளில் பிழவு விளையாட்டுப் போட்டிகளில் பிழவு என பல பிழவுகளை இவர் ஏற்படுத்தி இருந்தார். சங்கீதன் என்னும் பெயரை இவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் சங்கீதன் என்பது இவர் பெயர் அல்ல என்பதும் தற்போது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. சங்கீதன் என்னும் புலனாய்வுப் போராளி 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி முள்ளிவாய்க்காலில் வீரமரணம் அடைந்துள்ளார். லெப்டினன் கேணல் தரத்தில் இருந்த சங்கீதன் இறந்த பின்னர் அவர் பெயரை எடுத்துக்கொண்டு அப்படியே லண்டன் வந்த இந் நபர் தன்னை சங்கீதன் என எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தற்போது லண்டனில் தன்னை சங்கீதன் என எல்லோருக்கும் அறிமுகப்படுத்திய இவரின் பெயர் தயாபரன் என்று சொல்லப்படுகிறது. இறந்துபோன உண்மையான சங்கீதனின் படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அவர் முள்ளிவாக்காலில் ஒரு பிரத்தியேகமான செயலில் ஈடுபட்டிருந்தார்.(அது பாதுகாப்பான செய்தி). 1990 - 1991 ல் டங்கோ- 9 என்று சொல்லப்படும் புலிகளின் புலனாய்வு முகாமில் கடமையாற்றிய மல்லி மற்றும் காந்தி போன்ற போராளிகளோடு வீரமரணம் அடைந்த சங்கீதன் இருந்திருக்கிறார். 1993ல் மல்லி எனப்படும் புலனாய்வுப் போராளியின் தலையை வெட்டி சிங்கள இராணுவம் அவரைக் கொலைசெய்ய அவ்விடத்திற்கு காந்தி நியமிக்கப்பட்டார். வீரமரணம் அடைந்த சங்கீதன் மாத்தையாவை விசாரணை செய்யும் குழுவிலும் அங்கத்துவம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றை தெரிந்துகொண்ட தயாபரன் என்னும் நபர் வீரமரணம் அடைந்த சங்கீதன் பெயரைச் செல்லி லண்டன் வந்து ..தற்போது லண்டனில் பல குழப்பங்களை மேற்கொண்டு வருகிறார். உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி இவர் போலியான பெயரில் லண்டனில் உலாவருவதும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலதிக சான்றுகளும் ஆதாரங்கள் இருக்கிறது. மிக மிகப் பிரத்தியேகமான கடமை ஒன்று வழங்கப்பட்டு பல உயர் ரகசியங்களை தன்னோடு காத்து காயமடைந்த நிலையில் அவை அனைத்தும் எதிரியின் கைகளில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவற்றை எல்லாம் சேர்த்து தன்னோடு அழித்துக்கொண்டவர் சங்கீதன் ! அவர் தியாகங்களுக்கு மதிப்புக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் அவர் பெயரைத் திருடி தன்னை அவர்போலக் காட்டி ஒரு பித்தலாட்டத்தை நடத்திவருகிறார் தற்போது லண்டனில் சங்கீதன் என்று தன்னைத் தானே சொல்லிவரும் இந் நபர் !

Geen opmerkingen:

Een reactie posten