தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 januari 2012

கெஹலிய ரம்புக்வெல மகளுடன் தவறாக நடக்க முயன்ற சவீந்திர சில்வா!!

[ வியாழக்கிழமை, 12 சனவரி 2012, 09:42.33 AM GMT ]
நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் பணியாற்றும், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகள் சந்துலவிடம், ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தவறாக நடந்து கொள்ள முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
நியூயோர்க்கில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் உள்ள அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி இந்தத் தகவலை லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
செயலகத்தில் தன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும், போராடி அவரது பிடியில் இருந்து தப்பிக் கொண்டதாகவும் அமைச்சர் ரம்புக்வெலவின் மகள் தூதரக உயரதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீது தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதுடன், இந்த விவகாரத்தை இதற்கு மேலும் பெரிதுபடுத்தாமல் அமைதியாக இருக்குமாறும் அறிவுரை கூறியுள்ளார்.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீதான இந்தக் குற்றச்சாட்டு� பகிரங்கமானால் அதனை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என்றும் லங்கா நியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten