தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 januari 2012

கந்தையா ராஜகோபால்: செய்தியை நாம் மறுக்கிறோம் குடும்பத்தார் தகவல் !athirvu!!


19 January, 2012 by admin
சமீபத்தில் கந்தையா ராஜகோபால் என்பவர் திருகோணமலையில் சுடப்பட்டார். இவர் இராணுவத்துடன் தொடர்புடையவர் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது. இருப்பினும் தமக்கும் கள்ளக் கிரெடிட் காட் மற்றும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இக் குடும்ப அங்கத்தவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். வேண்டும் என்றே அவர்கள் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கில் சில விஷமிகளால் இச் செய்திகள் வெளியிடப்பட்டது என்று அவர்கள் அதிர்வு இணையத்துக்குத் தெரிவித்ததுடன் தாம் தரும் தமது பக்கச் செய்தியையும் பிரசுரிக்கக் கோரியிருந்தனர். பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் அவர்கள் தரும் இச் செய்தியையும் அவர்கள் பக்க ஞாயத்தை எடுத்துச் சொல்லவும் நாம் களம் அமைத்துக் கொடுத்துள்ளோம்.

மூதூர் மல்லிகைத்தீவைச் சேர்த்த கந்தையா இராஜகோபால் என்பவர் அண்மையில் திருகோணமலையில் வைத்து இனம் தெரியாத நபர்களால் சுடப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இந்நிலையில் இக்கொலை முயற்சியை திசைதிருப்பும் வகையில் சில சதி முயற்சிகள் நடைபெறுவதாக அறியக்கூடியதாக உள்ளது. கள்ளமட்டை ,இராணுவத்துடன் சம்மந்தன், புலிகளுடன் சம்மந்தம், துணை இராணுவக் குளுக்களுடன் சம்மந்தம்,போன்ற பொய்யான செய்திகளை வழங்கி அவர்களின் தனிப்பட்ட வாழ்கையில் களங்கத்தை ஏற்படுத்துகின்றார்கள்.

பொதுவாக இவர்களின் குடும்பத்தினர் இரானுவத்தினருடனோ அல்லது துணை இராணுவக்குளுக்களுடனோ அல்லது விடுதலை இயக்கங்களுடனோ பெரிதான உறவுகள் இல்லை. இவர்கள் தமது வியாபாரத்தில் கவனம் செலுத்தியவர்கள் தனிப்பட்ட ரீதியில் இராஜகோபால் என்பவர் சமுக சேவையாளர். இவர் மலையகத்தில் உள்ள அனாதைகள் இல்லைத்தை பராமரிப்பது விதவைகளுக்கான உதவிகள் பாடசாலைகளுக்கான உபகரணங்களை வழங்குவதும் தமிழ் கோவில்களைக் கட்டுவதற்கான உதவிகளை வழங்கிவருகின்றார். இப்படி பட்டவர்களை விமர்சிப்பது எமது சமுகத்திக்கு நல்லது இல்லை.

Geen opmerkingen:

Een reactie posten