தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 mei 2014

ஆட்சியாளர்களிடம் பிரச்சினைகள் பற்றி கூறினாலும் கவனம் செலுத்துவதில்லை!- மல்வத்து மாநாயக்கர்

பெண்ணை உரசிய இராணுவ வீரர்: செருப்பால் வெளுத்துவாங்கிய பெண்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2014, 02:10.49 PM GMT ]
வீதியில் சென்ற பெண்ணொருவர் மீது உரசிய இளைஞரை, அப்பெண் ஹீல் செருப்பால் தாக்கியத்தில் அந்த இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
பெண் தாக்கியதால் காயமடைந்த முன்னாள் இராணுவ வீரரான இந்த இளைஞருக்கு தலையில் 11 இடத்தில் குழி வடிவான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
1992 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த இந்த நபர், மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்தால், இராணுவத்தில் இருந்து விலகியுள்ளார்.
இந்த முன்னாள் இராணுவ வீரர், சேறு குழி ஒன்றை மிதிக்காது செல்ல முயற்சித்த போது குறித்த பெண் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFTYLYls4.html#sthash.NwXfWIxa.dpuf

ஆட்சியாளர்களிடம் பிரச்சினைகள் பற்றி கூறினாலும் கவனம் செலுத்துவதில்லை!- மல்வத்து மாநாயக்கர்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2014, 02:19.12 PM GMT ]
நாட்டின் பாரதூரமான பிரச்சினைகள் பற்றி ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு தெளிவுபடுத்தினாலும் அவர்கள் அது குறித்து கவனம் செலுத்துவதில்லை என மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மத தலைவர்கள் கூறுவதை ஆட்சியாளர்கள் செவிமடுக்காதது கவலைக்குரிய விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று மாநாயக்க தேரரை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எதிர்நோக்கப்படும் பாரிய பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களிடம் வாய் மூலமும் எழுத்து மூலமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரையும் சந்தித்தனர்.
தகுதியானவர்களுக்கு உரிய இடத்தை வழங்காததன் காரணமாக நீதித்துறை மட்டுமல்லாது சகல துறைகளிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக புத்தரக்கித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFTYLYls5.html#sthash.l0gcb6hJ.dpuf

Geen opmerkingen:

Een reactie posten