தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 mei 2014

தமிழ்வின்னுக்கு ஏன் இந்தத் தகிடுதித்தம்?

தமிழ்வின் புலம்பெயர; தமீழர்கள் மத்தியில் ஓரளவுக்கு நம்பிக்கைக்குரிய செய்தித்தளம். அதன் சில செய்தியாளர்களின் செயற்பாடுகளால்அதன்மீதுள்ள நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழின் ஞாயிறு சிறப்பம்சமான "சூரியகாந்தி" யின் இரண்டாம் பக்கத்தில் வெளியாகிய ஒரு தொடர் "மீண்டும் புலி உறுமல்". அதன் முதலாலது பத்தி இன்று வெளியாகியிருந்த நிலையில் அதனை அப்படியே சுவரொன்றில் ஒட்டிப் படம் பிடித்து "யாழ்ப்பாணத்தில் மீண்டும் புலி உறுமல் - சுவ◌ாட்டிகள்" என்று செய்தி வெளியிட்டிருக்கிறது தமிழ்வின். அதில் வேடிக்கை என்னவென்றால் சூரியகாந்தியின் பக்க எண்ணும் , பத்தியின் தொடர் எண்ணும் அப்படியே காணப்படுகிறது. இந்நிலையில் சுவரொட்டியில் என்ன எழுதியிருந்தது என்பதைப் பார்பதற்கு அச்சத்தில் பொதுமக்கள் அவற்றைச் சரியாக வாசிக்கவுமில்லையாம்"

உண்மையில் தமிழ்வின் நிர்வாகத்துக்குத் தெரியாமல் அதன் யாழ்ப்பாணச் செய்தியாளர் வேடிக்கையாக இந்தச் செய்தியை அனுப்பினாரா அல்லது வேண்டுமென்றே புலிப் பூச்சாண்டி விளையாட்டில் உதயனைச் சிண்டு முடிந்து அரசுடன் மோத விடும் தகிடு தித்தமா?
 —


“மீண்டும் புலி உறுமல்”: யாழில் சுவரொட்டிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2014, 01:21.37 PM GMT ]
யாழ். குடாநாட்டின் புறநகர்ப்பகுதியில் இன்று மாலையில் இனந்தெரியாத நபர்களினால் ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தினைக் கண்ணுற்று மக்கள் பீதியில் உறைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை மக்கள் அறிய முற்பட்டபோதிலும், அச்சத்தால் அருகில் செல்வதை தவிர்த்து  வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சில மணிநேரங்களின் பின்னர் குறித்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டிருந்ததாக அவதானித்தவர்கள் குறிப்பிட்டனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFTYLYlsz.html#sthash.3qVWmwki.dpuf








Geen opmerkingen:

Een reactie posten