சிறிலங்காப் படையினருக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி வழங்கக் கூடாது, அவர்களை சிறிலங்காவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.தாம்பரம் விமானப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த சிறிலங்கா விமானப்படையினர் ஒன்பது பேரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பெங்களூர் யலஹங்கா விமானப்படைத் தளத்திற்கு அனுப்பப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“போர்க்குற்றங்களுக்காக சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழர்கள் விரும்புகிறார்கள்.

இந்தியாவில் எந்வொரு இடத்திலாவது சிறிலங்கா விமானப்படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



http://uyarvu.com/index.php?option=com_content&view=article&id=18468%3A2012-07-06-18-04-59&catid=43%3Anormal-news&Itemid=18