தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 mei 2011

ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்​கு எதிராகத் திருப்பும் நடவடிக்கை றோவால் ஆரம்பம்!

(வீடியோ இணைப்பு)
ஜெயலலிதா என்றுமே ஈழத்தமிழருக்கு எதிராக இருக்கவில்லை என்பதால் இக்கட்டுரையில் இருந்து ஒரு துண்டை நீக்கியுள்ளேன்.புலிகளின் ஆதரவாளரின் தவறுகளால்தான் புலிகளும் தமிழரின் கனவுகளும் அழிந்தன,இனியும் இவர்களை நம்பினால் பாவம் தமிழர்கள்!!

அதன் முதல் கட்ட வேலைகளை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு அங்கமாக, இலங்கையில் அரச படைகளின் பிடியில் இருக்கும் கே.பியை சந்தித்து ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொலைக்காட்சிக்காக அது எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்த நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி கூறும் பதில்களும், மிகவும் ஆபத்தமானவை. இதன் மூலம் ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப றோ முயற்சிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.



விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியைக் கொண்றதாகக் குறிப்பிடும் கே.பி அதற்காக மன்னிபுக் கோருகிறார். பின்னர் அவர் குறிப்பிடுகையில் ஜெயலலிதா மீது புலிகள் ஆத்திரம் அடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அதன் காரணமகவே Z ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டதாகவும், சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் புலிகள் ஜெயலிதாவையும் சுட்டுக்கொண்றிருபார்கள் என்றும் கே.பி கருத்துத் தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வலது கரம் தான் தான், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துரைத்துள்ள கே.பி, தேசியத்தலைவர் தன்னை ஒரு அரசன் போலக் கருதியதாகவும், அதற்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளே காரணம் எனவும் கூறியுள்ளார். புலிகள் ஜெயலலிதாவை கொல்ல திட்டமிட்டிருந்தர் எனக் கூறி, அவரை ஈழத் தமிழ் மக்களையும் அன்னியப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது இந்திய உளவுத்துறை. இதற்கு கே.பியை ஒரு பகடைக்காயாக பயன்படுத்த அவர்கள் தவறவும் இல்லை !

ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'ரா'

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'ரா' மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய ) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும், அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது.

இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததோடு, தேனீர் விருந்துக்கு டெல்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கு எதிரான உணர்வுகளை கொண்டிருந்த ஜெயலலிதா,2009 போரில் சிங்கள் இராணுவத்தினரின் கொடூர செயல்கள் குறித்த தகவல்கள் மற்றும் அது குறித்த செய்திகளை அறிந்த பின்னர்தான் ஓரளவுக்கு தனது நிலையை மாற்றிக் கொண்டார்.

குறிப்பாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் முகாம்களில் படும் அவதிகளை நேரில் கண்டறிந்து வந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இது தொடர்பாக எடுத்துக் கூறிய உண்மைகள்தான் அவரை ஓரளவுக்கு மாற்றியது.

அத்துடன் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்கள் வாயிலாகவும் அவருக்கு இலங்கை நிலவரம் குறித்து எடுத்து சொல்லப்பட்டது.

அதன் பின்னரே இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.

Geen opmerkingen:

Een reactie posten