தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 8 november 2011

வன்னி மண்ணிலிருந்து அண்மையில் வந்த ஒரு பெண் போராளியின் கோரிக்கை

உலகம் எம்மை ஏமாற்றி விட்டது 9 நாடுகள் சேர்ந்து அடித்தன என்று 
புலம்பும் புத்திஜீவிகளுக்கு; 2006 இல் புலிகளை பயங்கரவாதிகள் 
என்று உலகமே தடை செய்ததே,அதை நீங்கள் அறியவில்லையா?அந்தளவுக்கு உங்கள் மீது தடைகள் இருந்ததா?புலிகளிடம் தற்கொலைத்
 தாக்குதல்கள் தொடர்ந்தால் உங்களை பயங்கரவாதிகள் பட்டியலில் 
சேர்ப்போம் என்று கூறப்பட்டதே,அதன் பின் தடையும் வந்ததே.உங்களுக்கு
 தெரியாதா?
 
போராளிப் பெண்ணே!! இயக்கத்தில் சேர்கையில் அந்தந்த இயக்கத்துக்குரிய 
சத்தியப்பிரமானப்பிரகாரம் நடப்பதாக உறுதி எடுத்து சாவோம்,கஸ்ரம் வரும் 
என்று தெரிந்த பின்தானே சேர்கிறோம்.அப்படியிருக்க நீங்களே விரும்பி உங்கள்
 பெற்றோர் தடுக்க  தடுக்க போய் சேர்ந்தது தமிழ் ஈழம் பெறுவோம் என்ற நம்பிக்கைதானே,சயனை கழுத்தில் மாட்டியது உயிருடன் எதிரியிடம் அகப்படக்கூடாது,ஆயுதம் ஏந்தியது அந்நியர் நம்மண்ணில் கால் பதித்தால் உயிரை விட்டாவது அவர்களை துரத்தவே! நீங்கள் அப்படியா செய்தீர்கள்??கட்டளைக்கு கீழ்ப் படிப்பவன் ராணுவம்,சுதந்திரத்தை வேண்டி நிற்பவன் போராளி,நீங்க ராணுவம் என்பதாலும் உயிரச்சம் கொண்டவர் என்பதாலுமே போராட்டம் தோற்று நீங்கள் உயிர் வாழ்வது! மக்களுக்காக நீங்கள் போராடியதாக சொல்லாதீர்கள்.மக்கள் உங்களிடம் சண்டையிட எப்போது சொன்னார்கள்.திணித்தீர்கள்.மக்கள் சுதந்திரம் வேண்டி அடிமைகள் ஆனதே உண்மை.நீங்கள் உங்கள் வீடுகளில் இருங்கள் நாங்கள் தமிழ் ஈழம் பெற்று தருகிறோம் என்று மற்றவர்களை கலைத்தீர்கள்.போகாதவரை போட்டீர்கள்.தட்டிக்கேட்டோரை துரோகி என்றீர்கள்.அண்ணன் மட்டுமே தலைவன் என்று அடிமைக் கோசம் எழுப்பி அவர் பெயரில் துதிப்பாடல் வேறு பாடினீர்கள்.இப்போது தவறை அடுத்தவரில் போட்டு தத்துவம் வேறு!!கேட்பவன் கேனை என்றால் எதுவும் பேசலாம் என்பது சரிதான்!!
 
தோழனுக்கு நேரே துப்பாக்கியை நீட்டாதே என்பது ஒழுங்கு,நீங்கள் உங்களுடன் படுத்திருந்தவரை நித்திரையில் தமிழ் மரபைமீறி போட்டீர்களே!!ஆயுதம் அற்றவரை,பெண்களை,நோயாளரை தாக்கக்கூடாது என்பது பொதுவிதி,குர்ரானின் விதியும் கூட!!நீங்கள் சரணடைந்தோரை,
கைதிகளை எல்லாம் போட்டீர்களே!!உங்கள் வழியில் இன்று ராணுவமும் தொடர்கிறதே!!முற்பகல் செயின் பிற்பகல் ...என்பது இதைத்தானோ?நாம் தமிழனின் கொள்கையில் இல்லாமல் அடுத்தவனை தமிழனா என்று எப்படி கேட்க முடியும்??கேட்கிறீர்களே!புறமுதுகு காட்டிவிட்டு ராணுவ தந்திரம் என்பவர் தமிழரல்ல!போராடி மரணிப்பவனே உண்மைத்தமிழன்.
 
[ திங்கட்கிழமை, 07 நவம்பர் 2011, 01:13.06 AM GMT ]
என் பாச உறவுகளே! உங்களுடன் நான் சிறிது நேரம் பேச விரும்புகிறேன், கொஞ்சம் செவிகளைக் கொடுங்கள். நான் உங்களுடன் உரிமையாகப் பேசமுடியும். வன்னியின் மடியில் வாழ்ந்தவள். என் குடும்பத்துக்காகவும் உங்களுக்காகவும் என் மண்ணின் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக போராடியவள். என் குடும்ப உறவுகளை தொலைத்து ஏமாற்றப்பட்டவள்.
தமிழனின் போராட்டம் நேர்மையானது, உண்மைக்காக போராடுபவர்கள் என்று எம்மைத் திட்டித் தருவதாகக் கூறி தட்டி வீழ்த்திவிட்டது உலக வல்லரசுகள்.
நாம் 1ஆம் – 2ஆம் உலகப் போர்களை வரலாற்று ஏடுகளிலேயே படித்து வந்தோம். ஆனால் நாம் அதை விடக் கொடுமைகளை அனுபவித்து விட்டோம். வலி சுமந்தவர்களாக வாழ்கிறோம்.
எம் தலைவன் போராட்ட வடிவங்களாக அகிம்சைப் போராட்டத்தை தியாகி தீலிபன் அண்ணா மூலமாகவும், மக்கள் படையில் தியாகி அன்னை பூபதி மூலமாகவும், ஆயுதப் போராட்டத்தை வரிப்புலிப் போராளிகளாகவும், அதைத் தாங்கும் தூண்களாக மக்களையும் வைத்து போராடிக் காட்டியவர்.
உலகத்தின் எல்லாக் காதுகளுக்கும் தமிழன் என்று ஒரு இனம் தொன்று தொட்டு இறைமையுடன் வாழ்ந்து வந்துள்ளான், வாழ்ந்து கொண்டு இருக்கிறான் என்று உரக்க கூறி விட்டார், ஆயுதம் அடங்கிவிட்டது.
உலகத்தின் எல்லா மூலைக்குள்ளும் அகதி அந்தஸ்து பெற்றவர்களாக உயிர் பயமற்று தமிழர் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வன்னி மண்ணில் போருக்குள் வாழ்ந்து மண்ணுக்காக தம் உறவுகளை விதைகுழிகளில் விதைத்து விட்டு, அந்த மான மறவர்களுக்கு முன்னால் நின்று போட்டு, விளக்கேற்றி ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்த முடியாமல் அந்த மாவீரர் கோயில்கள் இருக்கும் திசை நோக்கி கை கூப்பி மௌனமாக அழ மட்டுமே அந்த உறவுகளால் முடியும்.
ஆனால் புலம்பெயர்ந்து வாழும் எங்கள் கைகளையோ, கண்களையோ நாம் வாழும் நாடுகள் கட்டிப்போடவில்லையே........எமக்காய் வாழ்ந்து எமக்காய் தங்கள் உயிர்களைத் தந்த அந்த உறவுகளை நினைவு கூரும் நாங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்,
இப்போது நாம் போராடவில்லை,"செத்தவர்கள் போராடுகிறார்கள்".
இறுதிப்போரில் 30000 அல்ல அதற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் , இல்லை போராடினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் ஒட்டு மொத்த மக்களும் தடைகளை உடைத்துக் கொண்டு ஒரே தடவையில் வெளியேறி இருக்க முடியும், இவ்வளவு மக்கள் அழிப்பு வந்திருக்காது. அவர்கள் வரிப்புலி தலைவனுடன் சேர்ந்து போராடினார்கள். தலைவனுக்கு கை கொடுத்து தலைவனுக்கு அருகிலேயே இருந்தார்கள்.
எதிரியால் தலைவனை நெருங்க முடியவில்லை, அதனாலேயே சிங்கள வெறியாட்சியாளனின் படைகள் தாயின் வயிற்றுக் குழந்தையுடன் சாப்பாட்டிற்காக வரிசையாக நின்ற குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என ஈவிரக்கமின்றி எப்படியெல்லாம் கொல்லமுடியுமோ, அப்படிக் கொலை செய்யப்பட்டார்கள்.
வரிப்புலிப் போராளிகள் சத்தியப் பிரமாணம் செய்தார்கள் "புலிகள் தாயகம் தமிழீழத் தாயகம்". மக்கள் படை சத்தியம் செய்தார்கள் "தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்", இவர்களும் போராளிகள்.
வரிப்புலிகள் போராளிகள் தமிழீழ விருட்சத்திற்கு இரத்த நீரூற்றினார்கள். இறுதிப்போரில் மக்களே தசைகளையும் எலும்புகளையும் உரமாக்கினார்கள். இவர்களும் மாவீரர்களே.
மான மறவர்களுக்கு நினைவுகள் வைத்து பூசிக்கும் போது ஒட்டு மொத்தமாக உரமான எம் மக்களுக்கு ஒரே ஒரு நினைவுக்கல் வையுங்கள்.
எம் தலைவன் எம் கண் முன் தோன்றும் போது நிச்சயம் உங்களை பாராட்டுவார்.
இந்த மாவீரர் நாளில் நாங்கள் உறுதி எடுத்துக் கொள்வோம். நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன், " செத்தவர்கள் போராடுகிறார்கள்" என்று.
தமிழினப் படுகொலைகளிற்கு சாட்சியமாக புகைப்பட காணொளிகள் வாயிலாக அவர்கள் போராடுகிறார்கள்.
இவர்களுடைய சாவுகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை நான்- நீ என்று போட்டி போடுவதை விடுத்து எம் நாட்டின் விடிவுக்காக ஒற்றுமையாக நாம் வாழும் நாடுகளின் முன் நின்று ஐ.நாவின் காதுகளுக்கு கேட்கும் வரை உரத்துக் குரல் கொடுப்போம், எம் இனத்திற்கு விடிவு கிடைக்கும் வரை.

Geen opmerkingen:

Een reactie posten