தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 8 november 2011

சிறிலங்காவில் இணையத்தளங்கள் மீதான தடை – ஐரோப்பிய ஒன்றியம் கவலை

சிறிலங்காவில் இணையத்தளங்கள் பல தடை செய்யப்பட்டுள்ளதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
இது  தொடர்பாக கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிறிலங்கா அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறும், மதித்து நடக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஊடகங்களினால் வழங்கப்படும் தகவல்களை பெறும் உரிமையை குடிமக்கள் அனைவரும் கொண்டுள்ளனர் என்றும், அவை பற்றி சொந்தமாக முடிவுகளை எடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளதென்றும் ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஊடகங்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten