தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 april 2012

விடுதலைப் புலிகளுக்கு இழப்பீடு: சிபார்சு முற்றாக நிராகரிப்பு !


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென்ற முன்வைப்பை இலங்கை அரச தரப்பு முற்றாக நிராகரித்துள்ளதாக திவய்ன சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு 50 மில்லியனுக்கும் மேல் இலங்கையில் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் உலகில் எந்த ஒரு நாடும் தீவிரவாதிகளுக்கு இழப்பீடுகளை வழங்கியதில்லை என்றும் அரச தரப்பு தெரிவித்துள்ளதாகவும் திவய்ன கூறுகிறது.

உயிரிழந்த விடுதலைப்புலிகளுக்கு நல்லிணக்கத்தின் அடிப்படையில், அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்க வேண்டும் என ஆணைக்குழுவின் சிபார்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும். இலங்கை அரசானது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஒன்றன் பின் ஒன்றாக நிராகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Geen opmerkingen:

Een reactie posten