தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 april 2012

சம்பந்தன் அரசுக்கு ஒத்துழைப்பாம் ஆனால் சுரேஷ் இடையூராம் !


அரசியல் தீர்வு காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் உண்மையான அக்கறையுடன் அரசுக்கு ஆதரவு வழங்கி வருகின்ற போதிலும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தீவிரவாத கண்ணோட்டத்துடன் இச்செயன்முறைக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் அரசுக்கு எதிராக செயற்படுகிறார் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜெனிவா தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் தமிழ் சமூகத்தை தீவிரவாதத்தை நோக்கி தள்ளுகிறார்கள் என்றும் சஜின் வாஸ் குணவர்தன குற்றம் சாட்டினார். இவ்வாணைக்குழுவின் சிபாரிகள் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் ஒருபோதும் கூறவில்லை என்றும் சஜின் வாஸ் குணவர்தன கூறினார். ஜெனீவா தீர்மானமானது நிறைவேற்றுவதற்கான கடப்பாடு இல்லாத தீர்மானம் என்ற போதிலும் அது இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க விரும்பும் சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினரின் தந்திரோபாயத்தில் ஒரு முன்னோக்கிய படியாக அமையலாம். நாம் அதை அறிவோம்� என அவர் கூறினார்.

ஜெனிவாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், தமிழ் அமைப்புக்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்தவர்களில் சஜின் வாஸ் குணவர்தனா முக்கியமானவராவார். மகிந்த ராசபக்சவுக்கு மிகவும் நெருக்கமாக கருதப்படும் இவர் சிங்கள சண்டியன் போல ஜெனிவாவில் அநாகரீகமாக நடந்து கொண்டார் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவரே அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அரசதரப்பு குழுவின் முக்கிய நபராவார்.

Geen opmerkingen:

Een reactie posten