தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 september 2011

17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் ஜெனிவாவிற்கு ஓடவேண்டிய தேவையில்லை! ரணில்

[ வெள்ளிக்கிழமை, 09 செப்ரெம்பர் 2011, 08:29.27 AM GMT ]
17ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் நாடு முகம் கொடுக்கும் சர்வதேச அழுத்தத்திலிருந்து 50 வீதமான பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம். அதற்காக ஜெனிவாவிற்கு ஓட வேண்டிய தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
18ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை நாம் எதிர்க்கின்றோம். நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் இவை நிறைவேற்றப்படவில்லை.
18ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட நாளான இன்று  தேசிய துக்க தினமாகும். அதேபோல குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக் கோவை கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட இன்றும் (நேற்று) தேசிய துக்க தினம்.
தேசிய துக்க நாள்' “ஜனநாயக மண்சரிவு' சுயாதீனத்திற்கான அச்சுறுத்தலாகும் என்றும் அவர் சொன்னார்.
குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணையை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்து உரையாற்றியதன் பின்னர் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெவித்தõர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கைது செய்யப்பட்ட ஒருவருக்காக சட்டத்தரணி ஆஜராக முடியாது என அமைச்சர் தெரிவித்தார். எனினும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற வழக்குகளில் சட்டத்தரணிகள் ஆஜராகியிருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் அவருக்காக சட்டத்தரணி ஆஜராகலாம். இது சர்வதேச சட்டத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இன்று பொலிசாரின் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணி நேரம் தடுத்து வைத்திருக்கலாம். அதற்கான அதிகாரம் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் இருக்கின்றது. எனினும் பொலிஸ் அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்படுகின்றது.
இராணுவத்தை பயன்படுத்தியே கொழும்பு கொம்பனித்தெருவில் வீடுகள் உடைக்கப்பட்டன. கொழும்பு எங்களுடையது என்று கூறிக்கொண்டே வீடுகளை உடைக்கும் இராணுவத்தினரை 48 மணிநேரம் தடுத்து வைக்க வேண்டும்.
17ஆவது திருத்தத்தில் சட்டமா அதிபர், நீதிமன்றம், பொலிஸ் சுயாதீனமாக இருந்தது. சட்டமாஅதிபர் திணைக்களம் இன்று அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது.
அரசியலமைப்பே பெரிய சட்டம்' அதனைவிடவும் உயர் சட்டமொன்று இலங்கையில் இல்லை. நீதிமன்றம், பொலிஸ் இலஞ்ச ஊழல் திணைக்களம், சட்டமா அதிபர் சுயாதீனமானதாகும். இன்று அவற்றில் சுயாதீனம் இல்லை.
18ஆவது திருத்தம் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நிறைவேற்றப்படவில்லை என்று நானும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யான சுமந்திரனும் ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பி எதிர்ப்புத் தெரிவித்தோம். அந்த திருத்தத்தை நிறைவேற்று வதற்கு மாகாண சபைகளின் அதிகாரத்தை பெற வேண்டும். அவ்வறறு இல்லாமையினால் எதிர்த்தோம்.
18ஆவது திருத்தத்திற்கு பதிலாக ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் சகலரும் இணைந்து புதிய சட்ட திருத்தம் ஒன்றை நிறைவேற்றுவோம். இந்த சட்டம் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உமையின் பிரகாரம் நிறைவேற்றப்படவில்லை.
இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள கட்டளைகள், ஒழுங்கு விதிகளுக்கு அப்பால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சட்டமூலம் ஒன்றினை திருத்த முடியும். அதனால் ஒழுங்கு விதிகளை அமுல்படுத்த முடியாது. பொதுநலவாய பாராளுமன்ற சங்கம், சர்வதேச பராளுமன்ற சங்கத்திடம் இவை தொடர்பிலான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.
ஆலோசனைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கேட்க வேண்டியதில்லை. அதற்காக பொதுநலவாய நாடுகளிடம் நாம் அடிபணிந்ததாக அர்த்தப்படுத்திவிடவும் முடியாது. பொதுநலவாய பாராளுமன்ற தலைவராக எமது சபாநாயகர் இருப்பதனால் அதற்கான பிரச்சினை எழும்பாது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten