தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 september 2011

இனப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் இலங்கை வாழ்நாள் குறைந்து விடும் - அமரிக்காவின் சர்வதேச மன்னிப்புசபையும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும்

[ சனிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2011, 10:28.04 AM GMT ]
இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில்ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை இலங்கை பின்பற்றுமாறு தொடர்ந்தும்அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன
அமரிக்காவின் சர்வதேச மன்னிப்புசபையும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இந்த வலியுறுத்தலை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையிடம் விடுத்துள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் இந்தகோரிக்கைக்கு ஆதரவை தெரிவிக்கவேண்டும் என்று குறித்த இரண்டு அமைப்புகளும் கேட்டுள்ளன
பொதுஅமைப்புகளும் இந்த விடயத்தில் முக்கிய கவனத்தை செலுத்தவேண்டும்
அண்மையில்லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் பொதுமக்களின்நடவடிக்கைகளை உறுதிப்படுத்தின என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவுஉதவிப்பணிப்பாளர் எலின் பேர்சன் Elaine Pearson தெரிவித்துள்ளார்
இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்ற உயிரிழப்புகளை தடுக்க சர்வதேசம் அன்றுதவறிவிட்டது
எனினும் இன்றாவது அது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று Elaine Pearson கோரியுள்ளார்
நிரந்தரசமாதானத்தின் போது இந்த குற்றங்கள் கணக்கெடுக்கப்படாவிட்டால் இது எதிர்காலமுறைகேடுகளுக்கு வழிவகுக்கும்
ஆப்கானிஸ்தான்மற்றும் கொங்கோ ஆகிய நாடுகள் இதற்கு உதாரணங்களாகும்
இலங்கையின்உள்நாட்டு போர்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் தமிழ்மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகள் முன்னெடுக்கப்படாவிட்டால்அதுஇலங்கையின் குறுகிய வாழ்வு ஒன்றுக்கு வழியேற்படுத்தி விடும் என்றும் Elaine Pearson ஐபிஎஸ் இணைத்தளத்துக்கு தெரிவித்துள்ளார்
முன்னர் இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை இனங்காணாமை காரணமாகவே இன்றும்யாழ்ப்பாணத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இன்று எதிர்க்கட்சிகள் நீதிமன்றங்கள் மற்றும் பொது அமைப்புகள்அனைத்தும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் Elaine Pearson கூறியுள்ளார்
அமரிக்காவின் சர்வதேச மன்னிப்புசபையின் ஊடக தொடர்பு பணிப்பாளர் சாரொன் சிங் (Sharon Singh) தமது கருத்தில் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுமனித உரிமைகள் தொடர்பிலான உண்மை விசாரணைகளில் நீதி வழங்குவதில் இருந்துதோல்விகண்டுள்ளதாக குறிப்பிட்டார்

Geen opmerkingen:

Een reactie posten