தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 september 2011

அமெரிக்காவின் வாயை அடைக்க புதிய சட்டம் கொண்டு வருகிறது சிறிலங்கா

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ளது போன்று உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக லக்பிம நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் 2012 மார்ச்சில் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் புதிய சட்டத்தை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் தான், மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அனைத்துலக சமூகம் கொழும்பு மீது கொடுத்து வரும் அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ளது போன்று தீவிரவாதத்தை முறியடிப்பதற்கான புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஈவா வணசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.
25 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten